- மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டத்தின் அலிபாக் பகுதியைச் சேர்ந்த பெண்ணிடம் வெளிநாட்டிலிருந்து தங்கம் அனுப்புவதாக ரூ.1.12 கோடி மோசடி செய்ததாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. பாதிக்கப் பட்ட பெண் ஓய்வுபெற்ற நீதிமன்ற ஊழியராக பணியாற்றியவர் ஆவார்.
- சொமேட்டோ நிறு வனத்தின் இணை நிறு வனர் மோஹித் குப்தா தனது பதவியை ராஜி னாமா செய்வதாக அறி வித்திருந்த நிலையில், அந்நிறுவனத்தில் இருந்து 4சதவீத ஊழியர் களை நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது.
- ஆசியக்கோப்பை டேபிள் டென்னிஸ் மகளிர் பிரிவில் இந்தியாவின் மணிகா பத்ரா தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.
- தேனியில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்ததில் நோயாளி யுடன் சென்ற ஜெயா (55) என்பவர் நிகழ்விட த்திலேயே உயிரிழந்தார்.
- கத்தாரில் நடைபெற வுள்ள உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை சட்ட விரோதமாக பதிவு செய்து இணைய தளத்தில் ஒளிபரப்ப தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.