states

img

எல்ஐசியின் நிதி நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது

சென்னை, ஏப்.1- பேச்சுவார்த்தையில் ஊழியர் களின் கோரிக்கைகளை நிச்சயம் வெல்  வோம் என்று அகில இந்திய இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா கூறி னார். காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க  சென்னை கோட்டம்-1ன் தலைவர் ஜி. ஜெயராமன் பணிஓய்வு பாராட்டு விழா சென்னையில் சனிக்கிழமையன்று (ஏப்.1) நடைபெற்றது. இந்தக் கூட் டத்தில் அவர் பேசியதன் சுருக்கம் வருமாறு: இன்றைக்கு இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக அலுவலகமாக அதானி நிறுவனம் உள்ளது. பிரத மரும் அவரது அமைச்சரவையும் அதா னிக்காக சேவை செய்கிறார்கள். எல்ஐசியின் நிதி நிலைமை கேள் விக்குறியாகியுள்ளது. பங்குச்சந்தை யில் எல்ஐசியின் பங்கு விலையில் ஏற்றம் இறக்கம் காணப்படுகிறது. இத னால் எல்ஐசியின் நிதி நிலைமை ஆரோக்கியமாக இல்லை என்று சாமா னிய மக்கள் கருதும் நிலை ஏற்பட்டுள்  ளது. இது நமது இயக்கத்திற்கு மிகப்  பெரிய சவால் ஆகும். எல்ஐசியின் சாதகமான அம்சங் களை மக்களிடத்தில் பிரச்சாரம் செய்தோம். அதனால் மக்கள் நம்பி பாலிசிகளை வாங்கி எல்ஐசி-க்கு நல்ல  வர்த்தகத்தை அளித்தார்கள். ஆனால்,  தற்போது எதிர்மறையான கருத்துக் கள் அதிகரித்துள்ளது. அதற்குப் பதில் சொல்ல வேண்டிய மிகப்பெரிய கடமை நமக்கு உள்ளது. எல்ஐசி மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை மக்களிடம் கொண்டு சென்று சாதக பாதக அம்சங்களை எடுத்துச் சொல்வோம்.

கோரிக்கைகளை வெல்வோம்

எல்ஐசி பங்குகளின் மதிப்பு தற்கா லிகமாக சரிந்தாலும், மார்ச் மாதம் கடந்த நிதியாண்டு முடிவடையும் போது பங்குகள் மதிப்பு உயர்ந் துள்ளது. இதனால் நமது பொருளா தார கோரிக்கைகளை நிர்வாகத்தின் முன்பு வைக்க முடிந்தது. கடந்  தாண்டு ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி  ஊதிய உயர்வு குறித்த கோரிக்கை களை எல்ஐசி நிர்வாகத்திடம் அளித்  தோம். ஆனால், இதுவரை பேச்சு வார்த்தைக்கு அழைக்கவில்லை. பேச்சுவார்த்தையில் நிச்சயம் கோரிக்  கைகளை வெல்ல பாடுபடுவோம், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியத்தி லும் உயர்வு கிடைக்கப் பாடுபடு வோம். எல்ஐசி இயக்குநரிடம் தொலை பேசியில் பேசியபோது, ஊதிய உயர்வு  கோரிக்கைகளை நிதியமைச்ச கத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. மிக  விரைவில் பேச்சுவார்த்தை நடத்து வதற்கான அனுமதி கிடைக்கும். நம்பிக்கையுடன் இருங்கள் என்றார். ஏஐஐஇஏ-வை முறையாக அழைத்துப்  பேசவில்லை என்றால், போராட்டத்  திற்கும் தயாராக இருப்போம். நிலுவை யில் உள்ள அனைத்து கோரிக்கை களையும் வென்றெடுக்கும் வகையில் அந்த போராட்டம் இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.