states

வனத்துறை அலுவலகத்தில் அதிமுக எம்.பி., ரவீந்திரநாத் ஆஜராகி விளக்கம்

தேனி ,நவ.12- பெரியகுளம் அருகே தனது தோட்டத்தில் சிறுத்தை புலி உயிரிழந்து கிடந்த விவகாரத்தில், தேனி வனச் சரக அலுவலகத்தில் அதிமுகவின் தேனி மக்களவை உறுப்பினர்ப.ரவீந்திர நாத் நவம்பர் 12 சனிக்கிழமையன்று விசாரணைக்கு நேரில்ஆஜரானார். பெரியகுளம் அருகே கோம்பைப் புதூர் பகுதியில் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி ப.ரவீந்திரநாத்திற்கு சொந்தமான தோட்டத்தில் கம்பி வேலியில் சிக்கி சிறுத்தை உயிரி ழந்து கிடந்தது. இந்த வழக்கில் தோட்டத்தில் ஆட்டுக் கிடை அமைத் திருந்த அலெக்ஸ் பாண்டியன், தோட்ட மேலாளர்கள் தங்கவேல், ராஜவேல் ஆகியோரை வனத் துறையினர் கைது செய்தனர். தோட்ட உரிமையாளரான ப. ரவீந்திரநாத், அந்த நிலத்தின் கூட்டு பட்டாதாரர்களான பெரியகுளத்தைச் சேர்ந்த தியாகராஜன், காளீஸ்வரன் ஆகி யோரை தேனி வனச் சரக அலுவ லகத்தில் விசாரணைக்கு ஆஜராகு மாறு வனத் துறையினர் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். இதில், வனத் துறையினர் முன் விசாரணைக்கு ஆஜ ரான நிலத்தின் கூட்டு பட்டாதாரர்கள் தியாகராஜன், காளீஸ்வரன் ஆகி யோர்,

தங்களது நிலத்தை சில ஆண்டு களுக்கு முன் ப.ரவீந்திரநாத்திற்கு விற்பனை செய்துவிட்டதாக வாக்கு மூலம் அளித்தனர். ப.ரவீந்திரநாத் சார் பில் அவரது வழக்கறிஞர்கள் விசார ணைக்கு ஆஜராகி வனத் துறையின ரிடம் விளக்கக் கடிதம் அளித்தனர். இந்த நிலையில், சிறுத்தை உயிரி ழந்து கிடந்த விவகாரத்தில் தேனி வனச்சரக அலுவலகத்தில் மாவட்ட உதவி வனப் பாதுகாவலர் ஷர்மிலி முன்னிலையில் ப.ரவீந்திரநாத் விசார ணைக்கு ஆஜரானார்.நவம்பர் 12காலை 11.15 மணிக்கு தொடங்கி, பிற்பகல் 2 மணி வரை விசாரணை நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ப.ரவீந்திரநாத், சிறுத்தை உயிரி ழந்து கிடந்த தோட்டத்தின் உரிமை யாளர் என்ற முறையில் என்னிடம் விசா ரணை நடைபெற்றது. வனத்துறையின ரின் கேள்விகளுக்கு விளக்கம் அளித் தேன். இந்த வழக்கில்வனத் துறையின ருக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவர் என நம்புகிறேன் என்றார்.