சென்னை, செப். 18- அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை, இதுவே எங்கள் நிலைப்பாடு என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திங்களன்று சென்னை ராயபுரத்தில் செய்தி யாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,”ஒரு கூட்டணியில் இருந்து கொண்டு கூட்டணி தர்மத்தை மீறி பேசுகின்ற எந்த ஒரு செயலையும், கருத்தையும் தன்மானம் உள்ள அதிமுக தொண்டன் எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ளமாட்டான். அண்ணாமலை ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து எதற்காக விருப்ப ஓய்வு பெற்றார் என்று எனக்கு தெரியாது. அங்கு சென்று கிளறி னால்தான், இவரைப் பற்றி தெரியும். ஒரு அர சியல் தலைவருக்கே லாயக்கில்லாத, பாஜக தலை வருக்கே லாயக்கில்லாத, சிறுமைபுத்திக் கொண்ட, தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு அண்ணாமலை பேசி வருகிறார். அதிமுக என்பது ஒரு சிங்கக் கூட்டம். அந்த சிங்கக்கூட்டத்தைப் பார்த்து, சிறு நரி அண்ணாமலை ஊளையிடுகிறது. ஊளை யிடும் இந்த சிறு நரி தனியாக சென்று நிற்கட்டும். நோட்டாவுக்கு கீழே அண்ணாமலை வாக்கு வாங்குவாரே தவிர, நோட்டாவைத் தாண்ட மாட்டார். அப்படியிருக்கிறது அவருடைய செல்வாக்கு. பெரியார் குறித்து பேசுவதற்கு அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது? அதிமுக பொதுச் செயலாளர்,ஜெயலலிதா, எம்ஜிஆர், குறித்துப் பேச என்ன தகுதி இருக்கிறது? அண்ணாமலைக்கு பலமுறை எச்சரிக்கை கொடுத்தோம். அதிமுகவினர் திரண்டு எழுந் தால் நீங்கள் தாங்கமாட்டீர்கள். இனிமேல் அதி முகவினர் அண்ணாமலையை விடமாட்டார்கள். அண்ணாமலையை ஐடி விங்கில், தாறுமாறாக விமர்சனம் செய்வார்கள். நீங்கள் ஒரு கருத்து சொன்னால், அண்ணாமலை விமர்சனத்துக்கு எதிராக ஓராயிரம் எதிர்கருத்து சொல்லப்படும். அண்ணாமலை குறித்து மேலிடத்திலும் புகார் செய்துவிட்டோம். தேசிய ஜனநாயகக் கூட்டணி யில் இருக்கிறோம் என்பதற்காக, இவரை திருத்த வேண்டும்,
இதுபோல அவரை பேச வேண்டாம் என்று கூறிவிட்டோம். கூட்டணியில் இருக்கும் போது அண்ணாமலை இவ்வாறு பேசினால், தேர்தல் நேரத்தில் எப்படி வேலை செய்வார்கள்? பாஜக தொண்டர்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ள விரும்புகின்றனர். ஆனால் அண்ணாமலை விரும்பவில்லை. அவர் விரும் பாத சூழலில், இதுபோன்ற கருத்தைக் கூறி, எங் களுடைய தலைமையிலான கூட்டணியில் இருந்துகொண்டு அண்ணாமலை வைக்கும் விமர்சனங்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமா? அப்படி என்ன எங்களுக்கு அவசியம் இருக் கிறது? உங்களை சுமக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு என்ன இருக்கிறது? உங்களை யாரா வது சுமக்கத்தான் வேண்டும். உங்களுக்கு காலே கிடையாது. அண்ணாமலைக்கு காலே கிடை யாது. பாஜக இங்கு கால் ஊன்றவே முடியாது. எந்த ளவுக்கு உங்களுக்கு வாக்கு வங்கி இருக்கிறது என்பது தெரியும். அதிமுகவை வைத்துதான் உங்களுக்கு அடையாளமே. கூட்டணியைப் பொறுத்தவரையில், பாஜக அதிமுக கூட்டணியில் இல்லை. தேர்தல் வரும்போதுதான் அதுகுறித்து முடிவு செய்யப்படும்” என்று அவர் கூறினார்.