கரூர், ஜூலை 17- ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நில மோசடி புகாரில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் காவல் ஆய்வாளரும் கைது செய்யப்பட்டுள்ளார். கரூரில் பிரகாஷ் என்பவர் தனக்கு சொந்தமான ரூ. 100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை தனது மகள் சோபனா என்பவருக்கு செட்டில்மெண்ட் செய்து கொடுத்திருந்தார். இந்த நிலத்தை முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்துவிட்டதாக பிரகாஷ் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், விஜயபாஸ்கர் உள்ளிட்ட 7 பேர் மீது 8 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. ஜாமீன் மறுக்கப் பட்ட நிலையில் 40 நாட்களாக தலை மறைவாக இருந்த விஜயபாஸ்கர், மற்றும் வழக்கின் முக்கிய நபரான பிரவீன் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கேரள மாநிலம் திருச் சூரில் ஜூலை 16 அன்று கைது செய்த னர். பின்னர் கரூர் திண்ணப்பா நக ரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத் திற்கு அழைத்து வந்தனர். இதற்கி டையே அதிமுகவினர் குவிந்தனர். பின்னர், நள்ளிரவில் கரூர் குற்ற வியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் நீதி பதி பரத் குமார் முன்பு ஆஜர் படுத்தப்பட்டனர். இருவரையும் ஜூலை 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தர விட்டார். இதையடுத்து, ஜூலை 17 ஆம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு திருச்சி மத்திய சிறையிலும், பிரவீண் குளித்தலை கிளை சிறை யிலும் அடைக்கப்பட்டனர்.
காவல் ஆய்வாளர் கைது
இந்த 22 ஏக்கர் நிலமோசடி வழக்கில் சென்னையைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் பிருத்விராஜை யும் சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர். கரூரில் உள்ள மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதர், கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரில், கரூர் மாவட்டம் வாங்கல் பகுதி யைச் சேர்ந்த பிரகாஷ் மகள் ஷோபனா செட்டில்மென்ட் மூலம் அவரது சொத்தை கிரையம் செய்து கொடுப்பதற்காக கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி பதிவாளர் அலு வலகத்திற்கு வந்தார். சொத்தின் அசல் ஆவணம் சமர்ப்பிக்கப்படாத தால் சட்டப்படி அந்த ஆவணப் பதிவு நிலுவையில்வைக்கப்பட்டது. அதன் பிறகு அசல் ஆவணம் தொலைந்துவிட்டது எனக்கூறி சென்னை வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் பெறப்பட்ட சிஎஸ்ஆர் நகலை அளித்தனர். இதைத்தொட ர்ந்து அந்த சொத்தானது கடந்த மே 10 ஆம் தேதி சட்டப்படி கிரையம் செய்யப்பட்டது. அதன் பிறகு ஷோபனாவின் தந்தை பிரகாஷ் போலியான ‘நான்டிரேசபிள்’ சான்றிதழ் கொடுத்து மோசடியாக பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மனுவில் தெரிவித்திருந்தார். சோபனா பெயரில் இருந்த பத்தி ரங்கள் காணாமல் போய்விட்டதாக வில்லிவாக்கம் காவல்நிலை யத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டு அதன் பெயரில் காணாமல் போன பத்திரங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் பிரித்விராஜ் சான்றிதழ் அளித்திருந்ததாக கூறப்படுகிறது. அந்த சான்றிதழ் அடிப்படை யில் ஷோபனாவின் பெயரில் இருந்த 22 ஏக்கர் நிலத்தை முன் னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் தரப்பினர் தங்களுக்கு வேண்டியவர்கள் பெயரில் பத்திர பதிவு செய்து கொண்டனர். இந்த சூழலில் வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் அளித்த சான்றிதழ் போலியானது என கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரித்து வந்த சிபிசிஐடி போலீசார் வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் பிருத்விராஜை யும் நேற்று கைது செய்து அவரி டமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிருத்விராஜ் ஏற்கெனவே கரூர் மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் ஆய்வாளராகப் பணியாற்றியவர்.