சென்னை, நவ.10- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட தொழி லாளர்களுக்கு நான்கு மாதங்களாக வழங்க வேண்டிய சம்பளத்தை வழங்காமல் சில வாரங்களுக்கு மட் டும் தற்போது வழங்கிவிட்டு அவர் களை தீபாவளி கொண்டாட விடாமல் திண்டாட்டத்தில் தள்ளிய ஒன்றிய மோடி அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் கிராமங்களில் கருப்பு தீபாவளியாக கடைப்பிடிக்க அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது. சங்கத்தின் மாநில நிர்வாகிகள் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வெள்ளியன்று(நவம்பர் 10) மாநிலத் தலைவர் எம்.சின்னதுரை எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. அகில இந்தியத் துணைத் தலைவர் ஏ.லாசர் முன்னாள் எம்எல்ஏ மாநில பொதுச் செயலாளர் அமிர்தலிங்கம் மாநில பொருளாளர் பழனிச்சாமி உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டது. நிறைவேற்றப் பட்ட தீர்மானம். நாளை மறுதினம் தீபா வளி பண்டிகை கொண்டாட உள்ள நிலையில், ஊரக வேலைத் திட்டத்தில் வேலை செய்த பயனாளிகளுக்கு கடந்த நான்கு மாதங்களாக வழங்க வேண்டிய சம்பளத்தை வழங்காமல் ஒன்றிய பாஜக அரசு ஏமாற்றி வஞ் சித்துள்ளது. இதனால் கிராமப்புற ஏழை எளிய மக்கள் கடுமையான சிரமத்தில் உள்ளனர். சம்பள பாக்கி யை வழங்க கோரி விவசாய தொழிலா ளர் சங்கம் பல்வேறு கட்ட போராட் டங்களை நடத்தி வந்தது. கடந்த நவம்பர் 6 அன்று தமிழ்நாடு முழு வதும் ஒப்பாரி வைக்கும் போராட் டத்தை நடத்தியது. இந்த நிலையில் 12 வாரம் வரை சம்பளம் பாக்கி யுள்ள நிலையில், ஒன்றிரண்டு வாரங் கள் மட்டும் அவர்களின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பிவிட்டு ஐந்து வாரம் பத்து வாரம் என சம்பள பாக்கிவைத்து உள்ளது. வேலை செய்த பயனாளிகளுக்கு சம்பளம் வழங்காமல் மாதக்கணக்கில் காலம் தாழ்த்தும் பாஜக அரசின் தொழி லாளர் விரோத நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த நிலைக்குத் தள்ளிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து வரும் தீபாவளி தினத்தில் (நவம்பர் 12) அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் கிராமங்களில் கருப்புக்கொடி ஏற்றி கருப்புத் தீபாவளியாக கடைபிடிக்க வேண்டும் என அறைகூவல் விடுக்கிறோம்.