சென்னை, மார்ச் 9 - மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டத்தில் ஏரி, குளம், வாய்க்கால் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்ற ஒன்றிய பாஜக அரசின் உத்தர வுக்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் எம். சின்னதுரை எம்எல்ஏ, மாநிலப் பொதுச்செயலா ளர் வீ. அமிர்தலிங்கம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வரு மாறு: ஊரக வேலைத் திட்டத்தையும்- திட்டத்தின் உன்னதமான நோக்கத்தையும் ஒன்றிய பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளாக சிதைத்து வருகிறது. ஆட்சிப் பொறுப்பேற்ற காலம் முதல் திட்டத்தில் பல்வேறு திருத்தங்களை செய்து ஒப்பந்த தாரர்கள் பணம் சம்பாதிக்க சட்ட விரோதமாக உதவி வருகிறது. சாதிவாரியாக திட்டத்தை அம லாக்கம் செய்து, ஊதியத்தை சாதிய அடிப்படையில் வழங்கி உழைக்கும் மக்களை கூறு போட்டு மோதவிட முயன்றது. கட்டுமானப் பணிகளை திட்டத்தில் புகுத்தி ஒப்பந்ததா ரர்களின் கொள்ளைக்காடாக மாற்றியது. நிதி ஒதுக்கீட்டையும் தொடர்ந்து வெட்டிச் சுருக்கியது. இதன் காரணமாக கிராமப்புற ஏழைக ளுக்கு ஊரக வேலை திட்டத்தில் கிடைத்து வந்த வேலை நாட்களின் எண்ணிக்கை சரி பாதியாக குறைந்து, தற்போது 20 முதல் 40 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டு வருகிறது. ஆதார் இணைப்புடன் கூடிய ஊதிய பரிவர்த்தனை என சில மாதங்க ளுக்கு முன்பு 11 கோடி தொழிலாளர்க ளை திட்டத்திலிருந்து வெளியேற்றி யது. இதன் தொடர்ச்சியாக தற்போது, அதிக அளவிலான தொழிலாளர்க ளுக்கு வேலை அளிக்கும் ஏரி, வாய்க்கால், குளம் தூர்வாருதல் போன்ற மண் சார்ந்த வேலைகளை ரத்து செய்துவிட்டு, ஒப்பந்ததாரர்கள் கொள்ளையடிக்கும் விதமாக பொருட்கள் செலவினம் சார்ந்த (material component) பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
ஏரி, வாய்க்கால், குளம் தூர்வாரு தல் போன்ற வேலைகளைச் செய்தால் கூலி வழங்க இயலாது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. ஏரி, குளம், வாய்க்கால்கள் பராமரிப்பு செய்யப்பட்டதால் தான் தமிழ் நாட்டில் சமீப ஆண்டுகளில் பெய்த பெரு மழையை தாக்குப் பிடிக்க முடிந்தது. மழை பெய்த சில மணி நேரங்களில் வடிந்து இயல்பு வாழ்க்கையை மீட்டுக் கொடுக்க முடிந்தது. தங்கு தடையின்றி வாய்க்கால்களில் நீர் வந்து வயல் களில் பாய்கிறது. சமீபத்திய ஆண்டுகளில் தேசிய அளவில் நூறுநாள் வேலை திட்டத்தை சிறப்பாக செயல் படுத்தியமைக்காக 7-க்கும் மேற்பட்ட விருதுகளை தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது. இந்த சிறப்பெல்லாம் மண் சார்ந்த நீர் நிலைகளில் செய்த வேலைகளால் கிடைத்தது என்பதை ஒன்றிய அரசுக்கு கவனப் படுத்துகிறோம். விவசாய வேலைகள் இயந்திர மயமாகி உள்ள பின்னணியில், 80 சதவிகிதம் பெண் தொழிலாளர்கள் வேலை - வருமானம் இழந்து சிர மத்தில் தள்ளப்பட்டுள்ள சூழலில், நூறுநாள் வேலையை முடக்கும் இந்த நடவடிக்கை, தொழிலா ளர்களின் குடும்பங்களை அரை வயிற்று கஞ்சிக்கும் வழியில்லாமல் செய்வதாகும். இந்நிலையில், தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு வேலை அட்டை பெற்றுள்ள அனைத்து பய னாளிகளுக்கும் வேலை வழங்கிட நடவடிக்கை எடுப்பதுடன், பிரத மரையும் ஒன்றிய அரசையும் வலி யுறுத்தி, மண் சார்ந்த நீர் நிலைகளில் பெருமளவு தொழிலாளர்கள் பங்கேற்கும் அளவில் வேலை நடைபெறுவதை உறுதிப்படுத்தவும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.