states

45 லட்சம் குடும்பங்களுக்கு வீடு கட்டித் தருக!

திருவள்ளூர், ஜூன் 7- தமிழ்நாட்டிலுள்ள 45 லட்சம் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனையுடன் ரூபாய் பத்து லட்சம் மதிப் பில் வீடு கட்டி தருவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என  அகில இந்திய விவசாயத் தொழிலா ளர்கள் வலியுறுத்தியுள்ளது. அகில இந்திய விவசாயத் தொழிலா ளர்கள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம்,  திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி யில் மாநிலத் தலைவர் எம்.சின்னதுரை எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் அகில இந்திய துணைச் செயலாளர் வி.சிவதாசன், எம்.பி, அகில இந்திய துணைத் தலைவர் ஏ.லாசர், மாநில பொதுச் செயலாளர் வி.அமிர்தலிங்கம், மாநிலப் பொருளாளர் ஏ.பழனிசாமி, மாநிலச் செயலாளர் வி.மாரியப்பன், மத்தியக் குழு உறுப்பினர் அ.து.கோதண்டன், மாவட்டத் தலைவர் இ.தவமணி, பொருளாளர் என்.கங்காதரன், தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத்  தலைவர் பெ.சண்முகம் உள்ளிட்டு பலர் கலந்து கொண்டனர்.

நலிவடைந்த சிறு, குறு தொழில் களை பாதுகாக்க வேண்டும், நகர்ப்புற  வேலைவாய்ப்பு திட்டத்தை மாநிலம் முழுவதும் முழு வீச்சில் அமலாக்க வேண்டும். கேரளா இடது  ஜனநாயக முன்னணி  அரசை போல தமிழ்நாட்டில் உள்ள 45 லட்சம் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கி,  ரூ.10 லட்சம்  மதிப்பீட்டில் வீடு கட்டுவதை உறுதி செய்ய வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு சட்டத்தில் ஒரு குடும்பத்திற்கு 100 நாட்கள் வேலை தொடர்ந்து வழங்க வேண்டும். திட்டம் அமலாக்கம் செய்வதில் நடைபெறும் முறைகேடுகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவள்ளூர் மாவட்டத்தில் பயணிக்கும் கொசஸ்தலை ஆறு உள்ளிட்ட பாசன ஆறுகள், ஓடைகள், ஏரி, குளங்களில் மணல் குவாரி அமைத்து மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் தடுத்து  நிறுத்த வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகர்ப்புற வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அனைத்து நகர்புற உள்ளாட்சி அலு வலகங்கள் முன்பாக தொடர் போராட்டங்கள் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.