நெல் கொள்முதல் விலை ரூ.100 உயர்வு!
தமிழ்நாடு சட்டப்பேரவை செவ்வாயன்று (மார்ச் 21) காலை 10 மணிக்கு கூடியதும், இந்த ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.
நெல்லுக்குப்பின் பயிர் சாகுபடி
தமிழ்நாட்டில் சங்க காலத்திலேயே பயிர் சுழற்சி மேற்கொள்ளும் வழக்கம் இருந்துள்ளது. நெல்லை அறுவடை செய்வதற்கு முன்பே, எஞ்சியுள்ள ஈரத்தைப் பயன்படுத்துவதற்காக, சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக் கள், பருத்தி ஆகியவற்றைப் பயிரிடும் வழக்கம் தமிழ்நாட்டில் இருந்தது. அவ்வழக் கத்தை இன்னும் விரிவாக்கும் பொருட்டும், செறிவாக்கும் பொருட்டும், ஆறு இலட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல்லுக்குப் பின் மாற்றுப்பயிர் சாகுபடி மேற்கொள்ள உதவி அளிப்பதற்காக வரும் ஆண்டில் ரூ. 24 கோடி நிதி ஒதுக்கப்படும்.
குறுவைப் பருவத்தில் மாற்றுப் பயிர்
பயிர்களின் சுழற்சி, மண்ணை வளமாக்கும்; உற்பத்தியைப் பெருக்கும். அதை அடையும் பொருட்டு, குறுவைப் பருவத்தில் குறைந்த நீர்த் தேவை யுள்ள சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றின் சாகுபடியை ஊக்குவித்திட, வரும் நிதியாண்டில் ஒரு இலட்சம் ஏக்கர் பரப்பள வில் மாற்றுப் பயிர் சாகுபடிக்காக ரூ. 16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
கடைமடைக்கும் பாசன நீர்
கடைமடைக்கும் பாசன நீர் செல்லும் வகையில் இந்த ஆண்டினைப் போலவே வரும் ஆண்டும் காவிரி, வெண்ணாறு வடி நிலப் பகுதியிலுள்ள தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் இரண்டாம் கட்டமாக, 1,146 கிலோ மீட்டர் நீளத்திற்கு ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு வாய்க்கால்களைத் தூர் வாரும் பணிகள், ஒரு லட்சத்து 32,000 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படும். 2022-23 குறுவை, சம்பா கொள்முதல் பருவத்தில் இதுவரை 3 லட்சத்து 73 ஆயிரம் விவசாயிகளிடமிருந்து 27 லட்சத்து 23 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ. 5,778 கோடி வழங்கப் பட்டுள்ளது. அதேபோல், வரும் ஆண்டு நெல் கொள்முதல் செய்ய சன்னரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்குக் கூடுதலாக 100 ரூபாயும், பொதுரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்குக் கூடு தலாக 75 ரூபாயும் ஊக்கத் தொகையாக வழங்க 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* 2020-ஐ விட 2021-22 ஆம் ஆண்டில் வேளாண் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.
* கரும்பு விவசாயிகளுக்கு ஆதாய விலையான டன் ஒன்றுக்கு ரூ.2,821 மேல் தகுதியுள்ள விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.1,950 வழங்கப்படும். இதற்காக ரூ.253 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
* கம்பு, கேழ்வரகு நேரடியாக கொள்முதல் செய்யப்படும்.
* ரேசன் கடைகளில் கம்பு உள்ளிட்ட சிறு தானியங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* நிலக்கடலை, எள், சோயா, மொச்சை போன்ற பயிர்களை விரிவாக்கம் செய்திட ரூ. 33 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
* 2,500 கிராமங்களுக்கு 15 லட்சம் தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும்.
* மின்சக்தி அல்லது சூரிய சக்தி மூலம் பம்பு செட்டுகள் மானியத்தில் வழங்கப்படும்.
* 37 மாவட்டங்களில் 385 வேளாண் வட்டார விரிவாக்க மையங்கள் அமைக்கப்படும்.
* சென்னை மாதவரம் தோட்டக்கலை பூங்காவை அழகுப்படுத்த ரூ. 5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
* தமிழகத்தில் நிலத்தடி நீர் அளவு அதிகரித்துள்ளது.
* 119,97,000 மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளோம்.
* வறட்சி, வெள்ள பாதிப்புகளை சமாளிக்கும் பயிர் ரகங்களை உருவாக்க வேண்டியது அவசியம்.
* அறிவியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மகசூலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளிடமிருந்து பயிற்களை காக்க சட்ட விதிகளுக்குட்பட்டு நடவடிக்கை எடுக்க தனி குழு அமைக்கப்படும்.
* கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து துவரை, உளுந்து, பச்சைப்பயிறு உற்பத்தி அதிகரிக்கப்படும்.
* நிலக்கடலை, எள் போன்ற முக்கிய எண்ணெய் வித்துக்கள் அதிகம் விளையும் மாவட்டங்களான திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, தருமபுரி, திருப்பத்தூர், அரியலூர், வேலூர், புதுக்கோட்டை ஆகியவற்றை ஒருங்கிணைத்து எண்ணெய் வித்துக்கள் சிறப்பு மண்டலம் உருவாக்கப்படும்.
* வரும் ஆண்டில் காப்பீட்டு கட்டண மானியத்தில் மாநில அரசின் பங்களிப்பாக ரூ.2337 கோடி ஒதுக்கீடு செய்து பயிர் காப்பீட்டு திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
* கல்வராயன் மலை, பச்சை மலை, வத்தல் மலை, சித்தேரி, ஜவ்வாதுமலை, ஏலகிரி, கொல்லி மலை, தாளவாடி, பர்கூர் உள்ளிட்ட மலை பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின விவசாயிகளுக்கு அனைத்து வகையிலும் உதவி செய்யப்படும்.
* தக்காளி, வெங்காயம், சௌ சௌ, பட்டானி, பீன்ஸ் உற்பத்தி அதிகரிக்கப்படும்.
விவசாயம் சார்ந்த பணிகளில் 100 நாள் வேலை!
வேளாண் வளர்ச்சியும், சிற்றூர்களின் வளர்ச்சியும் முன்னேற்ற வண்டியின் இரட்டை மாடுகள். ஒன்றை ஒன்று சார்ந்தவை. வயலைச் செதுக்கி வீட்டைச் செதுக்கும் நிகழ்வினை சிற்றூர்களில் காணலாம். வேலை வாய்ப்பு, இயற்கை வள மேம்பாடு, மகளிர் வாழ்வாதார வளர்ச்சி முன்னேற்றத்தில் ஊரகத் துறையின் பங்கு மிக முக்கிய மானது. எனவே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் வரும் ஆண்டில் ரூ.6,600 கோடியில் இயற்கை வள மேலாண்மைப் பணிகளான தடுப்பணை, பண்ணைக் குட்டைகள், கசிவு நீர்க்குட்டை கள், புதிய குளங்கள், கால்வாய்களைத் தூர்வாருதல் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த பணிகள், கல் வரப்பு, மண் வரப்பு, தனிநபர் கிணறு, சமுதாயக் கிணறு, பால் சேகரிப்பு மையம், உணவு தானியக் கிடங்கு, தோட்டக் கலைப் பயிர்கள் பயிரிட 19,400 பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கு தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும். விவசாய விளைபொருட்களை விவசாயிகளின் வயல்களில் இருந்து அருகிலுள்ள சந்தைக்குக் கொண்டு செல்வதை மேம்படுத்துவதற்காகவும், வேளாண்மைக்கு இயந்திரங்களைக் கொண்டு செல்வதற்காகவும் வரும் ஆண்டில் ரூ. 710 கோடி செலவில் கிராமப் பஞ்சாயத்துகளில் 2,750 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஊரகச் சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நெல் ெஜயராமன் மரபுசார் நெல் ரகங்கள்
தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் ரகங்களான தூய மல்லி, சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, கிச்சிலி சம்பா, தங்க சம்பா, கீரை சம்பா ஆகியவற்றைப் பாதுகாத்து பரவலாக்கிட, நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தில், 2021-22 ஆம் ஆண்டு, 196 மெட்ரிக் டன் விதைகள் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன. அதைப்போன்றே, இவ்வாண்டும் அரசு விதைப் பண்ணைகளில், 200 ஏக்கர் பரப்பளவில் விதை உற்பத்தி செய்யப்பட்டு, மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும். இதற்கென 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மேலும், அகில இந்திய அளவிலான பாரம்பரிய நெல் விதைகளை, இனத் தூய்மையுடன் விதை வங்கியில் பராமரித்து வரும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக, 10 விவசாயிகளுக்கு வரும் ஆண்டில் தலா மூன்று லட்சம் ரூபாய் வீதம் 30 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
சிறுதானிய இயக்கம் - பரிசு!
நெற்பயிரில் மாநில அளவில் அதிக விளைச்சல் பெறும் விவசாயிக்கு மட்டும், ஐந்து லட்சம் ரூபாய் பரிசு தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. அனைத்துப் பயிர்களுமே அரவணைக்கத் தக்கவை என்பதை அடிப்படையாகக் கொண்டு, நெல்லுக்கு வழங்கி வந்ததை, சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் போன்றவற்றிற்கும் வழங்கவேண்டும் என்கிற அடிப்படையில், வரும் ஆண்டு முதல் கம்பு, கேழ்வரகு, தினை,சாமை, குதிரைவாலி, துவரை, உளுந்து, பச்சைப் பயறு, நிலக்கடலை, எள், கரும்பு போன்ற பயிர்களைச் சாகுபடி செய்து மாநில அளவில் அதிக விளைச்சல் பெறும் விவசாயிக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும். அதேபோல, உணவு தானியப் பயிர்கள் உற்பத்தி, உற்பத்தித் திறனில் சிறந்து விளங்கும் களப்பணியாளர்கள், வட்டார அலுவலர்கள், மாவட்ட அலுவலர்களை ஊக்கப்படுத்தும் விதமாக வரும் ஆண்டு முதல், விருதுகள் வழங்கப்படும்.
வேளாண் இயந்திரங்கள்
தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் வேளாண் இயந்திரங்கள் கிராமங்கள் தோறும் வேளாண் இயந்திரங்கள் தடையின்றிக் கிடைக்க ஏதுவாக, தமிழ்நாட்டில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் பகுதிக்கேற்ற வேளாண் இயந்திரங்கள் வாங்கப்பட்டு விவசாயிகள் தேவைக்கேற்ப இ-வாடகை செயலியுடன் இணைத்து வாடகைக்குவிடப்படும். இதற்கென ரூ. 500 கோடி நபார்டு வங்கி உதவியுடன் ஒதுக்கீடு செய்யப்படும்.
வேளாண்மையில் நானோ தொழில்நுட்பம்
வேளாண்மையில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தவல்லதாக நானோ தொழில்நுட்பம் அறியப்பட்டுள்ளது. உரம், நுண்ணூட்டம், பூச்சிக்கொல்லி, விளைபொருளின் தரமறிதல், சேமிப்பு காலத்தை அதிகரித்தல் ஆகியவற்றில் நானோ தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. நானோ யூரியா ஒன்றிய அரசால் அங்கீகரிக்கப்பட்டு, ட்ரோன் தொழில்நுட்பத்துடன் சேர்த்துப் பரவலாக்கப்பட்டு வருகிறது. நானோ தொழில்நுட்பத்தின் அடிப் படையிலான செயல்பாடுகள், பொருட்கள் மூலம் வேளாண்மையிலுள்ள தீர்க்கப்படாத சவால்களுக்குத் தீர்வு காணும் வண்ணம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் நானோ தொழில்நுட்ப மையம் அமைக்கப்பட்டு ஆராய்ச்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருவதோடு வேர் வளர்ச்சி, வறட்சியைத் தாங்குதல், நுண்ணூட்டமளித்தல், விளைபொருட் களின் வாழ்நாளை அதிகரித்தல் ஆகிய வற்றுக்கான பல நானோ தயாரிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு நானோ தொழில்நுட்பம் குறித்து விவசாயிகள் அறியும் வண்ணம் வேளாண் அறிவியல் நிலையம், அட்மா திட்டம், ஆளில்லா வானூர்திக் கழகம் மூலம் செயல்விளக்கங்கள் செய்து காண்பிக்கப்படும்.
வட்டாரத்திற்கு ஒரு வேளாண் விஞ்ஞானி
வேளாண், தோட்டக்கலைப் பயிர்களில், புதிதாக வெளியிடப்பட்ட உயர் மகசூல் ரகங்கள், சாகுபடித் தொழில்நுட்பங்கள், பூச்சி நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான பயிர்ப்பாதுகாப்பு முறைகள், ஒருங் கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, நவீன இயந்திரங்கள், மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதற்கான உத்திகள் போன்ற அனைத்து தகவல்களையும் விஞ்ஞான ரீதியிலான ஆலோசனைக ளையும் விவசாயிகளுக்கு நேரடியாக வழங்குவதற்காக, வேளாண் கல்லூரிகள், வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள் அல்லது வேளாண் அறிவியல் நிலை யங்களிலிருந்து ஒவ்வொரு வட்டாரத் திற்கும் ஒரு வேளாண் விஞ்ஞானி பொறுப்பு அலுவலராக நியமிக்கப்படுவார். வாழை ஆராய்ச்சி நிலையம் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி விருது நகர் உள்ளிட்ட ஆறு தென் மாவட்டங்களில் வாழை 22,000 எக்டரில் பயிரிடப்படுகிறது. வாழையின் பரப்பு தமிழ்நாட்டில் அதிகரித்து வந்தாலும் அதன் உற்பத்தித்திறன் குறைந்து வருகிறது. தென் மாவட்ட விவசாயிகளின் தேவை யைப் பூர்த்தி செய்யும் வகையில் வாழை இரகங்களை சேகரித்து, உரிய இரகங்க ளைத் தேர்வு செய்து, பகுதிக்கேற்ற வாழை ரகங்களை உருவாக்கி அவற்றை விவசாயி களுக்குக் கிடைக்கச் செய்வதை உறுதி செய்யும் வகையில் தூத்துக்குடி மாவட்டம், கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரியில் வாழைக்கென ஒரு தனி ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும். இதற்கென 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். வாழையின் உற்பத்தித்திறனில் தமிழ் நாட்டில் முதலிடம் வகிக்கும் தேனி மாவட்டத் தில், வாழைக்கென தனி அடையாளம் உருவாக்கி உலக சந்தைக்கு கொண்டு சேர்க்கும் விதத்தில், வாழைக்கென்று ஒரு தனி தொகுப்புத் திட்டம் 130 கோடி ரூபாய் நிதி மதிப்பீட்டில் அரசு, தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்.
கிராம வேளாண் முன்னேற்றக் குழு
பயிர் சாகுபடியில் வருமானம் வளம் பெற, பருவத்திற்கேற்ற பயிர், பயிருக்கான தொழில்நுட்பம், மதிப்புக்கூட்டுதல், சந்தை வழிமுறைகள் குறித்த தகவல்கள், உரிய நேரத்தில் உழவர்களுக்கு வழங்கப்படு வது முக்கியம். ஐந்து ஆண்டுகளில், தமிழ்நாட்டில் அனைத்து கிராம ஊராட்சி களிலும், அனைத்துக் குக்கிராமங்களை உள்ளடக்கி, கிராம வேளாண் முன்னேற்றக் குழு அமைக்கப்படும். இக்குழுவில் கிராம ஊராட்சியிலுள்ள அனைத்து குக்கிராமங் களிலுள்ள அனைத்துப் பிரிவுகளையும் சார்ந்த, 25 முதல் 50 விவசாயிகள் உறுப்பினர்க ளாக இருப்பார்கள்.