சென்னை, ஜூன் 29- அரசு மதுபானக் கடைகளில் காகித குடுவைகளில் மது விற்ப தற்கு ஆலோசனை நடத்தப்பட்டது என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர் களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது:- டாஸ்மாக் கடைகளின் விற்பனை தொகை இருப்பை இரவு நேரங்களில் ஊழியர்கள் எடுத்துச் செல்லும்போது பல்வேறு அசம்பா வித சம்பவங்கள் ஏற்படுவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. அதனை தடுக்கும் வகையில் வங்கி அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், வங்கி அதிகாரிகளே நேரடியாக கடைக்கு வந்து பெற்று செல்லும் வகையிலோ அல்லது வாகனங்கள் மூலம் ஒவ்வொரு கடையாக பெறக் கூடிய வகை யிலோ நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலத்தை போன்று கண்ணாடி பாட்டில்களுக்கு பதில், டெட்ரா பாக்கெட்டில் (காகிதக் குடுவை) மதுபானம் வழங்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. ஒரு பாட்டிலை வாங்கி 2 பேர் பிரிக்கும் போது தான் அதில் விஷம் உள்ளிட்ட பொருட்கள் கலப்பதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. இந்த பிரச்ச னைகளை தவிர்க்க, 90 மில்லி டெட்ரா பாக்கெட்டில் மதுபானம் வழங்கலாம் என்றும் ஆலோசிக் கப்பட்டுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளி யிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.