சென்னை,ஜூன் 14- தகுதிபெற்ற மாணவர்களை அரசு மாதிரி பள்ளிகளில் வருகிற 21 ஆம் தேதிக்குள் சேர்க்க வேண்டும் என்று அரசு மாதிரிப் பள்ளிகளின் உறுப்பினர் -செயலர் இரா.சுதன் தெரிவித்திருக் கிறார். இதுகுறித்து அவர், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை வருமாறு: அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாண வர்கள் கல்வி, நுண்கலை மற்றும் விளை யாட்டுகளில் சிறந்து விளங்குவ தற்கான வாய்ப்பை வழங்குவதற்கு ஏதுவாக மாதிரிப் பள்ளிகள் உருவாக் கப்படும் என்று தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது. அதை செயல்படுத்தும் விதமாக சென்னை, அரியலூர், மதுரை, தரும புரி, திருச்சி, சேலம், திருவண்ணா மலை, கன்னியாகுமரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் உண்டு, உறை விட வசதிகளுடன் கூடிய 40 மாதிரிப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மாதிரிப் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பில் உயிரியல் மற்றும் கணினி அறிவியல் பாடப்பிரிவில் சேர தகுதி பெற்ற மாணவர்களின் விவரம் தற் போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மாதிரிப் பள்ளிகளில் ஜூன் 21 ஆம் தேதிக்குள் சேருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதன் தலைமை ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்திருக் கிறார்.