states

img

ஆதித்யவர்தனஸ்ரீ நினைவு தினம்

கிருஷ்ணகிரி, ஜன. 17- ஒருங்கிணைந்த தருமபுரி மாவட் டம், தேன்கனிக்கோட்டை வட்டம், கெல மங்கலம் அருகில் 32 ஆண்டுகளுக்கு முன்பு அனுசோலை கிராமத்தில்  கள்ளச் சாராயம் காய்ச்சி விற்றுவந்த சமூக விரோதிகளையும்,கந்துவட்டி கும்ப லையும் எதிர்த்து  வாலிபர் சங்க பகுதிச் செயலாளராக இருந்த ஆதித்யவர்தன ஸ்ரீ தொடர் போராட்டங்களை நடத்தி வந்தார். இதனை சகித்துக் கொள்ள முடியாத கள்ளச்சாராய கந்துவட்டி கும்பல் வாலி பர் சங்க நிர்வாகிகளை கடுமையாக தாக்கியதுடன், தோழர் ஆதித்யவர்தன ஸ்ரீயை வீட்டுக்குள் புகுந்து கொடூரமாக வெட்டி கொலை செய்தனர். கெலமங் கலம் பகுதி மக்களை கள்ளச்சாராயம், கந்து வட்டியிலிருந்து மீட்டிட உயிர் தியாகம் செய்த தோழர் ஆதித்ய வர்தன ஸ்ரீ நினைவை போற்றும் வகை யில் ஒவ்வொரு ஆண்டும் தியாகி ஆதித் தியர்வதன ஸ்ரீ நினைவு நாள் அனு சேனையில் அனுசரிக்கப்பட்டு வரு கிறது. 32 ஆவது ஆண்டு  நினைவு தினக் கூட்டம் மாவட்டக் குழு உறுப்பினர் சீனி வாசன் தலைமையில் நடைபெற்றது.

மாநிலக் குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, மாவட்டச் செயலாளர் ஜி.கே.நஞ் சுண்டன், வாலிபர் சங்க மாநில துணைச் செயலாளர் செல்வராஜ் மற்றும் மாவட்டத் தலைவர்கள் உரை யாற்றினர். முன்னதாக, ஊர்வலமாக சென்று ஆதித்யவர்த்தன ஸ்ரீ நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் சேகர், இருதயராஜ், சாம்ராஜ், ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, சுரேஷ், பிரகாஷ், ஒன்றியச் செயலாளர்கள் கெலமங்கலம் ராஜா, தளி வெங்கடேஷ், ஓசூர் ராஜா ரெட்டி, மாநகரச் செய லாளர் சி.பி.ஜெயராமன், அஞ்செட்டி வட்டச் செயலாளர் தேவராஜ், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் இளவரசன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ரேகா,தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் நாகேஷ்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.