கோவை, ஆக.19- கோவையிலிருந்து கூடுதல் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பி.ஆர்.நடராஜன் எம்.பி., அளித்த கடிதத்திற்கு, இட நெருக்கடி காரணமாக ரயில்களை இயக்க முடியாது என்று தென்னக ரயில்வே பொதுமேலாளர் பதில் அளித்துள்ளார். கோவை மாவட்ட பகுதி யிலிருந்து கூடுதல் ரயில் சேவைகளை துவங்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தொடர் முயற்சி களை எடுத்து வருகிறார். மேலும், ரயில்வே துறை உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து கோரிக்கைகளை வைத்து வருகின்றார். அதன்படி பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி பி.ஆர்.நடராஜன் தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு, தென்னக ரயில்வே பொது மேலாளர் தற்போது பதில் அனுப்பியுள்ளார்.
அதில், கோவை சந்திப்பு ரயில் நிலையத்தில் இட நெருக்கடி அதிகமுள்ள காரணத்தால் புதிய ரயில்களை இயக்குவதில் சிரமம் உள்ளது எனக் குறிப் பிட்டுள்ளார். பயணிகள் ரயில்களுக் கான பயணச்சீட்டு கட்ட ணத்தை கொரோனா காலத்திற்கு முன்பு இருந்த நிலைக்கு குறைத்திட வேண்டும் என்ற கோரிக் கைக்கு, கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு பயணிகள் ரயில்கள், விரைவு ரயில்களாக இயக் கப்படுவதால் பயணச்சீட்டு கட்டணத்தை குறைத்திட இயலாது என்றும் தெரி வித்துள்ளார். கோவை - மங்களூர் விரைவு ரயிலை மேட்டுப் பாளையம் வரை நீட்டித்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு, மேட்டுப் பாளையம் ரயில் நிலையத் தில் உள்ள இட நெருக்கடி காரணமாக நீட்டிக்க இயலாது என்று பதில் அளித்துள்ளார். துடியலூர், சிங்கா நல்லூர், இருகூர், வஞ்சி பாளையம் ஆகிய ரயில் நிலையங்களில் பயணிகள் ரயில்களை நிறுத்தி இயக்க வேண்டும் என்ற கோரிக் கைக்கு, அந்த ரயில் நிலையங்களில் ரயில்வே வாரியம் அனுமதித்துள்ள சராசரி அளவைவிட குறை வான பயணச்சீட்டுகளே விற்பனையாவதால், ரயில்கள் நிற்பது கைவிடப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. கிணத்துக்கடவு, பொள்ளாச்சி ரயில் நிலையங்களை இணைத்து கோவை ரயில்வே கோட்டம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு, அதுகுறித்து ரயில்வே வாரியம் தான் முடிவெடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.