states

கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கூடுதல் மாணவர் சேர்க்கை

சென்னை,செப்.2- நடப்பு கல்வியாண்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கூடுதலாக மாணவர்களை சேர்ப்பதற்கு உயர்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது.  நடப்பு கல்வியாண்டில் கூடுதல் தேவையுள்ள பாடங்க ளில் அரசு கலை மற்றும் அறிவியல்  கல்லூரியில் 20 விழுக்காடும், அரசு உதவிப்பெறும் கல்லூரிக ளில் 15 விழுக்காடும், சுயநிதிக் கல்லூரிகளில் 10 விழுக்காடும் மாணவர்களை கூடுதலாக சேர்ப்பதற்கு உயர்கல்வித்துறை அனுமதி வழங்கி உள்ளது. உயர்கல்வித்துறை செயலா ளர் கார்த்திகேயன் வெளியிட் டுள்ள அரசாணையில், 2022-23ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி விகிதம் சீராக உள்ளது. ஆனா லும், மாணவர்கள் அதிகளவில் விண்ணப்பம் செய்துள்ளதால், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், கலைப் பாடப் பிரிவுகளில் 20 விழுக்காடு கூடு தலாகவும், அறிவியல் பாடப்பிரிவு களுக்கு ஆய்வக வசதிக்கு ஏற்ப 20 விழுக்காடு கூடுதலாகவும் மாணவர்களை சேர்ப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் இந்த கூடுதல் மாண வர்கள் சேர்க்கைக்கு கல்லூரிகள் அந்தந்த பல்கலைக் கழகங்க ளின் அனுமதி பெற வேண்டும். அதேபோல் அரசு உதவிப் பெறும் கல்லூரிகளில் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் 15 விழுக் காடும், சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் 10 விழுக்காடும் மாணவர்களை சேர்க்க அனுமதிக்கப்படுகிறது. அரசு உதவிப்பெறும் கல்லூரி களில் கூடுதலாக மாணவர்களை சேர்ப்பதால் கூடுதலாக பணியிடங் களை கேட்கக்கூடாது. கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அந்தந்த பல்கலைக்கழகங்களின் அனு மதியை பெற வேண்டும் எனவும் அதில் கூறியுள்ளார்.