states

ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு கூடுதல் இழப்பீடு

சென்னை, நவ. 16- தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத் தில்  நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரி ழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட நிதியோடு மேலும் கூடுதலாக தலா 5 இலட்சம் ரூபாய்  வீதம் நிதி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அரசு தரப்பில் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துக் களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதி மன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் அரசுக்கு அளித்த அறிக்கையின்மீது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த மாதம் 19ஆம் தேதி நடைபெற்ற விவா தத்திற்கு பதிலளித்துப் பேசிய முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் “துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத் தினருக்கு ஏற்கெனவே வழங்கிய நிதியோடு, கூடுதலாக தலா 5 லட்சம் ரூபாய் வீதம் நிதி வழங்கப்படும்” என்று அறிவித்திருந்தார். மேற்படி அறிவிப்பைச் செயல்படுத் தும் வகையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத் தினருக்கு கூடுதலாக தலா 5 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 65 இலட்சம் ரூபாயி னை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதலமைச்சர் புதனன்று (நவ. 16) உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.