states

சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்த விவகாரம்

ஈரோடு, ஜூலை 15- 16 வயது சிறுமியிடம் சட்டவிரோத மாக கருமுட்டை எடுத்த குற்றத்திற்காக ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு  சீல் வைத்தனர்.  ஈரோட்டில் 16 வயது சிறுமியிடமி ருந்து சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்து விற்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் மேற் கொண்ட விசாரணையையடுத்து சிறுமி யின் தாய், அவருடன் வசிப்பவர், கரு முட்டையை விற்கும் இடைத்தரகர் மற் றும் சிறுமியின் ஆதாரை திருத்தம் செய் தவர் ஆகிய 4 பேர் கைது செய்யப் பட்டனர்.  இந்த சட்டவிரோத கருமுட்டை விற்பனை விவகாரத்தில் தனியார்  மருத்துவமனைகள் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து மருத்து வக்குழு மற்றும்  குழந்தைகள் பாது காப்பு ஆணையம் உள்ளிட்ட அமைப்பி னர் விசாரணையில் ஈடுபட்டனர். இதில் அடுத்டுத்த அதிர்ச்சி தகவல்கள் வெளி யானது.

இதனிடையே தமிழகத்தில் இக் குற்றத்தில் ஈடுபட்ட மருத்துவமனை கள் நிரந்தரமாக மூடி சீல் வைக்கப் படும் என சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.  இந்நிலையில் வெள்ளியன்று ஈரோடு மாவட்ட மருத்துவம் மற்றும்  நலப்பணிகள் இணை இயக்குநர் (பொ) ஆர்.பிரேமகுமாரி தலைமையில், குடும்ப நல துணை இயக்குநர் என்.என். ராஜசேகரன், ஈரோடு வட்டாட்சியர் பால சுப்பிரமணியம், வீரப்பன்சத்திரம் காவல் ஆய்வாளர்(பொறுப்பு) நிர்மலா மற்றும் அதிகாரிகள் ஈரோடு சுதா மருத்து வமனை ஸ்கேன் மையத்துக்கு சீல் வைத்தனர். மொத்தம் 5 ஸ்கேன் கருவி கள் மற்றும் அதற்கான அறைகள் சீல் வைக்கப்பட்டன. இந்த பணிகள் சுமார் 6 மணி நேரம் நடந்தது. மேலும் மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வரு பவர்களை 15 நாட்களில் மாற்று மருத் துவமனைகளுக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே இந்த 15 நாள்கள் காலக்கெடு முடிந்த பிறகு,  மீண்டும் அதிகாரிகள் குழுவினர் நேரில் வந்து மருத்துவமனைக்கு சீல் வைக் கும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அதி காரிகள் தெரிவித்தனர்.  பின்னர் அதிகா ரிகள் ஈரோட்டில் இருந்து புறப்பட்டு பெருந்துறை ராம்பிரசாத் மருத்துவ மனைக்கு சென்றனர்.  சுதா மருத்துவமனை உள்ளிட்ட மேலும் சில மருத்துவமனைக்கு சீல் வைக்கும் நடவடிக்கை துவக்கியுள்ள தாக மருத்துவத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.