states

வடஇந்தியர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பினால் நடவடிக்கை : காவல்துறை

சென்னை, மார்ச் 2- “இந்தி பேசும் வட  இந்தியர்கள் மீது தமிழர் கள் தாக்குதல் நடத்து வது போல சமூக வலை தளங்களில் பகிரப்படும் கருத்துகள் தவறானவை. உரிய ஆதாரங்களின்றி இது போன்ற கருத்துகளைப் பதிவிடுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக் கப்படும்” என்று தமிழ்நாடு  காவல் துறை தெரிவித் துள்ளது. இதுதொடர்பாக தமிழ் நாடு காவல் துறை தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தி பேசும் வட இந்தியர்கள் மீது தமிழ்நாட்டில், தாக்குதல் நடத்துவது போல சமூக வலைதளங்கள் உள்ளிட்ட ஊடகங்களில் வதந்திகள் பரப்பப்படுகிறது. உரிய  ஆதாரங்களின்றி இது போன்ற பதிவுகள் பகிரப்படு கிறது. எனவே, இதை உண் மையென்று நம்பி யாரும்  வதந்தியை பரப்ப வேண் டாம். சமூக வலைதளங் களில் வேகமாக பகிரப் படும் அந்த வீடியோ, உண் மையில் தமிழ்நாட்டில் உள்ள  பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழி லாளர்களுக்கு இடையே நடந்த சண்டையாகும். மற்றொரு வீடியோ கோவை யில் உள்ளூர்வாசிகள் சம்பந்தப்பட்ட வீடியோ.  தமிழ்நாடு மிகவும் பாது காப்பான அமைதியான மாநிலம்.  சட்டம் - ஒழுங்கைத் திறம்பட உறுதி செய்து பொதுமக்களின் பாதுகாப்பு வழங்கி வருகிறது. எனவே, தாக்குதல் தொடர்பாக பகிரப்பட்டுள்ள இந்த ட்வீட் தவறானது. எனவே, இந்த தவறான தகவலை உண்மையென்று நம்பி இதைப் பகிரவேண்டாம். மீறி இதுபோன்ற வதந்தி களைப் பரப்புவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பதிவிட்டுள்ளது.