states

ஷோபா கரந்த்லாஜே மீது நடவடிக்கை தேர்தல் ஆணையம் உத்தரவு

கர்நாடகாவில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய ஒன்றிய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜேவின், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வந்து எங்கள் கர்நாடகா ஹோட்டலில், வெடிகுண்டுகளை வைக்கின்றனர்; எங்கள் மாநிலம் மீது தாக்குதல் நடத்துகின்றனர்; அவர்கள் மீது கர்நாடக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார். அவர் மீது தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில்  ஷோபா கரந்த்லாஜேவின் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளதன் அடிப்படையில்  உரிய நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடகா தேர்தல் அதிகாரிக்கு இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 48 மணி நேரத்திற்குள் இந்த விவகாரத்தில்  அறிக்கையை தாக்கல் செய்யவேண்டுமென தனது உத்தரவில் கூறியுள்ளது.