states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

8 டாலர் புளு டிக் விவகா ரத்தால் 15 பில்லியன் டாலர் சந்தை மதிப்பை இழந்துள்ளது எலி லில்லி (eli lilly) என்ற மருந்து நிறுவனம். எலி லில்லி  நிறுவனத்தின் பெயரில் போலி கணக்கு மூலம்  புளு டிக் பெற்று இன்சு லின் மருந்து இலவசம் என அறிவித்ததால், எலி லில்லியின் சந்தை மதிப்பு  மளமளவென சரிந்தது. இந்த விவகாரத்தால் புளு டிக் கட்டண விதிகளை டுவிட்டர் நிறுவனத்தின் புதிய உரிமையாளர் எலான் மஸ்க் நிறுத்தி வைத்துள் ளார்.

ஜனாதிபதி முர்முவுக்கு எதிராக கருத்து தெரி வித்த விவகாரத்தில் எழுத்துப்பூர்வமாக மன் னிப்பு கேட்குமாறு திரி ணாமுல் காங்கிரஸ் கட்சி யின் மூத்த தலைவரும், மேற்கு வங்க அமைச்சரு மான அகில் கிரிக்கு தேசிய மகளிர் ஆணை யம் கடிதம் அனுப்பியுள் ளது. மேலும் இந்த விவ காரத்தில் விசாரணை நடத்தி விரைவில் கடும் நடவடிக்கை எடுக்குமாறு மேற்குவங்க மாநில டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டி டுள்ளது.

கள்ளக்குறிச்சி கோமுகி அணையிலிருந்து சுமார் 3000 கன அடி உபரி நீர்  வெளியேற்றப்பட்ட நிலையில், கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து பெங்களூரு செல்ல விருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணி கள் விமானம் புறப்படு வதற்கு முன்பாகவே இயந்திரக்கோளாறு கண்டு பிடிக்கப்பட்ட தால் 133 பேர் உயிர் தப்பி னர்.

வருவாய் இழப்பீட்டை சரிசெய்து, செலவுகளை குறைக்க இருப்பதாக கூறி வால்ட் டிஸ்னி நிறு வனமும் ஆட்குறைப்பு செய்ய உள்ளதாக அறி வித்துள்ளது. ஏற்கெ னவே டுவிட்டர், மெட்டா ஆகிய நிறுவனங்களும் ஆட்குறைப்பு அறி விப்பை சதவீதத்துடன் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக ஆளும் குஜ ராத்தில் வரி ஏய்ப்பு தொடர்பாக 150 இடங்க ளில் ஜிஎஸ்டி அதிகாரி கள் அதிரடி சோதனை நடத்தினர்.

சர்வதேச கிரிக்கெட் வாரி யத்தின் (ஐசிசி) தலை வராக நியூசிலாந்தின் கிரேக் பார்க்லே மீண்  டும் தேர்வு செய்யப்பட் டுள்ளார். ஐசிசியின் நிதி மற்றும் வணிக விவ கார கவுன்சிலின் தலை வராக பிசிசிஐ செயலா ளர் ஜெய் ஷா நியமிக் கப்பட்டுள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்க ருக்கு வழங்கப்பட்ட 6  மாத கால சிறை தண்ட னைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்  துள்ள நிலையில், மேலும் 4 நிலுவை வழக்கு தொடர்பாக வருகின்ற 25-ஆம் தேதி வரை சவுக்கு சங்கரை கடலூர் சிறையில் அடைக்க எழும்பூர் 5-வது நீதி மன்ற மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமை பயணம் தஞ்சாவூர் ‘யாத்திரை கணேசன்’ விபத்தில் உயிரிழப்பு

தஞ்சாவூர், நவ.12 - தஞ்சாவூர் கீழவாசல் பூமால்ராவுத்தன் கோவில் சேர்ந்தவர் கணேசன்(60). இவர் தஞ்சாவூர் மாவட்ட சேவாதளம் உள்ளிட்ட மாநகர காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியாக இருந்தார். கன்னி யாகுமரி மாவட்டத்தில் இருந்து தொடங்கிய இந்த பாத யாத்திரை யில் கணேசன் கலந்து கொண்டு நடந்து சென்றார். தீபாவளி பண்டிகைக்காக 3 நாட்கள் மட்டும் தஞ்சாவூருக்கு வந்துவிட்டு, மீண்டும் பாத யாத்திரையில் பங்கேற்றார். இந்நிலையில், வியாழக்கிழமை மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே பாதயாத்திரை நடைபெற்றபோது, இரவு 8 மணி  அளவில் யாத்திரை குழுவினர் தங்கியிருந்த இடத்தில் சாப்பிட்டு  விட்டு, வெளியே வந்தார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி  ஒன்று கணேசன் மீதும், மற்றொரு காங்கிரஸ் தொண்டர் மீதும் மோதி யது. இதில் படுகாயம் அடைந்த கணேசனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை  பலனின்றி அவர் வியாழக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தார். இதையடுத்து யாத்திரை கணேசன் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை காங்கிரஸ் எம்.பி.க்கள், நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கி டையில், வெள்ளிக்கிழமை காலை பாத யாத்திரையை தொடங்கும் முன்பாக ராகுல்காந்தி, “யாத்திரை கணேசன்” உயிரிழப்புக்கு ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்திவிட்டு பின்னர் புறப்பட்டார்.