சென்னை,செப்.19- சாதிக்கு ஒரு தொழில் என்ற ஒன்றிய அரசின் மனுவாத திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் செப்டம்பர் 22 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச்செய லாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: இந்திய சமூகத்தின் தீராத பிணியாக சாதியம் நீடித்து வருகிறது.ஆரம்பக் கல்வி நிலையங்கள் முதல் மயானங்கள் வரை சாதியப் பாகுபாடு களும் ஏற்றத்தாழ்வுகளும் நீடித்து வருகின்றன. இந்திய மக்களிடம் முழுமையான அறிவியல் சிந்தனையை நவீன கல்வி ஏற்படுத்தியிருக்க வேண்டும்.ஆனால் சமூகத்தின் நீட்சியாகவே கல்வி நிலையங்கள் இருப்பதனால் போது மான மாற்றங்கள் ஏற்படவில்லை. வசிப்பிடங்களும் தொழில்களில் படிந்திருக்கிற சாதியத்தின் நிழல் களும் சாதியத்தைத் தாங்கிப் பிடித்து வருகின்றன. இந்நிலையில் தேச விடுதலை தினத்தில் பிரதமர் அறிவித்து இப் போது நடைமுறைக்கு வந்திருக்கிற விஷ்வகர்மா யோஜனா என்கிற 13,000 கோடித்திட்டம் பாரம்பரிய தொழில் கள் என்ற பெயரில் சாதியத்தை மீண்டும் புதுப்பிக்கிறது.சாதிக்கு ஒரு தொழில் என்பது இந்திய மக்கள் மீது திணிக்கப்பட்ட குலத்தொழில். இதனை ஒழிக்க வேண்டிய காலத்தில் ஒன்றிய அரசே குலத்தொழி லை திட்டமாக அறிவித்திருப்பதை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வன்மையாகக் கண்டிக் கிறது. இத்திட்டத்தை உடனடியாக கைவிடக் கோரி செப்டம்பர் 22 அன்று தமிழ்நாடு முழுவதும் கண்டன இயக்கம் நடத்த வேண்டும். இவ்வியக்கத்தில் சாதி ஒழிப்பு மற்றும் ஜனநாயக இயக்கங்களை பங்கேற்கச் செய்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ள னர்.