சென்னை,நவ.26- ஆட்டோ மற்றும் மோட்டார் வாக னங்களுக்கு ஆன்லைன் அபராத முறையை கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம் மேளனம் (சிஐடியு) தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து சம்மேளன மாநிலத் தலைவர் ஏ. குமார், பொதுச்செயலா ளர் ஆ. சிவாஜி ஆகியோர் விடுத் திருக்கும் அறிக்கை வருமாறு:- ஓட்டுநர் உரிமம் இல்லை என்றால் ரூ. 5000 அபராதம், அதிக பாரம் ஏற்றி யதாக கூறி ரூ.20,000, புகை செக்கப் இல்லை என்று கூறி ரூபாய் 10,000, தலைக் கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.1000 என கடுமையான அபராத கட்டணத்தை உயர்த்தி, அதனை ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கும் முறை தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. ஒன்றிய பாஜக அரசாங்கம் கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்ட திருத்த விதிகளை அப்படியே தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசாங்கம் முனைந்துள்ளது.
இதனை அமலாக்குகிறோம் என்ற பெயரில் விருதுநகரில் ஒரு ஆட்டோ தொழிலாளிக்கு அதிக பாரம் ஏற்றிய தாக ரூ.25,000 அபராதமும், பெரம்ப லூரில் ஒரே ஆட்டோவிற்கு 3000 அபராதமும், ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தலைக் கவசம் அணியவில்லை என்று ரூ.1000 அபராதம் வசூலிக்கப்பட் டுள்ளது. ஆட்டோ ஓட்டுநர்கள் மட்டுமின்றி இருசக்கர வாகன ஓட்டுநர்கள், இதர வாகன ஓட்டுநர்களின் வருமானத்தை ஒரே முறையில் அபராதமாக பறிக் கிற ஏற்பாட்டை தமிழக காவல்துறை செய்து வருகிறது. இந்த அபராதம் ஆன்லைன் மூலம் விதிக்கப்படுவதால் கடுமையாக பாதித்துள்ளனர். இதனால், ஆங்காங்கே ஓட்டுநர்க ளுக்கும் காவல் துறையினருக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகி யுள்ளது. சட்ட ஒழுங்கும் பாதிக்கப்படு கிற நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசாங்கம் போர்க்கால அடிப்படையில் இப்பிரச்சனையில் தலையிட்டு ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மோட்டார் வாகன சட்ட திருத்தம் என்கிற பெயரில் வசூலிக் கப்படுகிற அநியாய அபராத கட்ட ணத்தை தடுத்து நிறுத்த வேண்டும். ஆன்லைன் மூலம் வசூலிக்கப்படும் அபராதத்தை முற்றாக ஒழிக்க வேண்டும் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்கள்.