states

வலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

சென்னை, நவ. 21- தமிழகத்தில் செவ்வாயன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய  வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள் ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு வங்கக் கடலில் நிலவுகின்ற காற்றழுத்த தாழ்வு  மண்டலம், திங்களன்று (நவ. 21) காலை  8.30 மணி அளவில் காரைக்காலில் இருந்து கிழக்கு - வட கிழக்கே சுமார் 470 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து கிழக்கு -  தென் கிழக்கே 420 கிலோ மீட்டர்  தொலைவிலும் மையம் கொண்டுள் ளது. இது மேற்கு - வட மேற்கு திசையில்,  தெற்கு ஆந்திர, தமிழக, புதுவை, கடற்கரை நோக்கி நகர்ந்து செவ்வா யன்று (நவ. 22) காலை ஆழ்ந்த காற்ற ழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக் கூடும். இதன் காரணமாக செவ்வாயன்று (நவ. 22) வட தமிழகம், புதுவை, காரைக் கால், பகுதிகளில் ஒரு சில இடங்களி லும், தென் தமிழகத்தின் ஒரு சில இடங்க ளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசா னது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணி ப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய  வாய்ப்பு உள்ளது. புயல் எச்சரிக்கை கூண்டு  நாகப்பட்டினம், காரைக்கால், சென்னை, காட்டுப்பள்ளி, பாம்பன் உள்ளிட்ட துறைமுகங்களில் 3ஆம் எண்  புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட் டுள்ளது.

திடீர் காற்றுடன் மழை பெய்திடும் என்பதை குறிக்கும் வகையில் இந்த 3ஆம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் சின்னம் காரணமாக நாகை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடந்த  10 நாட்களாக கடலுக்கு மீன் பிடிக்க  செல்லவில்லை. அதேபோல் மறு அறிவிப்பு வரும் வரை ராமேஸ்வரம்  மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை செவ்வாய்க்கிழமை (நவ. 22) ஆந்திர கடலோரப் பகுதிகள், தமிழக  - புதுவை கடலோரப் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகள், தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு  45 முதல் 55 கிலோ  மீட்டர் வேகத்தி லும் இடையிடையே 65 கிலோ  மீட்டர்  வேகத்திலும் வீசக்கூடும். மன்னார்  வளைகுடா பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிக ளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.