மாந்திரீக பூஜை செய்வதாக கூறி வாலிபர் அடித்து கொலை
தெலுங்கானா மாநிலம் மஞ்சி ரியாலா மாவட்டம் சென்னூர் நகரை சேர்ந்த வர் தாசரி மது (35). இவர் பல மாதங்களாக உடல்நிலை பாதிக் கப்பட்டு இருந்துள்ளார். இதையடுத்து, சாமியார் ஒரு வரிடம் தாசரி மதுவை குடும்பத்தி னர் அழைத்துச் சென்றுள்ளனர். சாமி யார் தாசரி மது மீது தீயசக்தி சேர்ந் துள்ளதால் உடல்நிலை பாதித்துள் ளது என்றும், தீயசக்தியை உடலில் இருந்து வெளியேற்ற மாந்திரீக பூஜை செய்ய வேண்டும் எனக்கூறி திங்களன்று கோதாவரி ஆற்றின் அருகே தாசரி மதுவை அழைத்துச் சென்று, நிர்வாணப்படுத்தி சரமாரி யாக அடித்து கொடுமைப்படுத்தி யுள்ளார். இதில் தாசரி மது, திடீரென மயங்கி விழுந்து இறந்து போகவே, சடலத்தை யாருக்கும் தெரியாமல் எரிக்க சாமியார் ஏற்பாடு செய் துள்ளார். இதற்கிடையில் சாமியார் பூஜை செய்தபோது அங்கிருந்த தாசரிமதுவின் உறவினர், ரகசிய மாக செல்போனில் வீடியோ எடுத் தார். ஆனால் தாசரி மது இறந்த வுடன் அதிர்ச்சியடைந்த அவர், வீடி யோவை போலீசாருக்கு அனுப்பி னார். அதனை கண்ட போலீசார் தாசரி மதுவின் சடலத்தை மீட்டனர்.
லட்சத்தீவு எம்.பி.யின் தண்டனைக்கு தடை விதிக்க மறுப்பு
முன்னாள் ஒன்றிய அமைச் சர் செய்யதின் மருமகன் முஹம்மது சாலிஹை கொல்ல முயன்ற வழக்கில் என்சிபி கட்சித் தலைவர் முஹம்மது பைசல் எம்பி உட்பட 3 பேர் குற்றவாளிகள் என்று கவரத்தி அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர்களுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை யும் விதிக்கப்பட்டது. இதையடுத்து எம்.பி., பதவியில் இருந்து பைசல் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஜன வரி 25ஆம் தேதி உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை முடக்கியது. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து லட்சத்தீவு நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தை அணுகியது. கடு மையான குற்றங்களில் குற்றவாளி கள் என்ற தீர்ப்புகளை முடக்குவது கவனமாக ஆய்வு செய்த பிறகே மேற்கொள்ளப்பட வேண்டும் என் கிற அறிவுறுத்தலை உச்சநீதிமன்றம் வழங்கியது. கவரத்தி நீதிமன்றத்தின் உத்த ரவை ரத்து செய்த உச்சநீதிமன்றம், வழக்கை உயர்நீதிமன்றம் மறுபரிசீ லனை செய்ய உத்தரவிட்டது. நீதி பதி பி.வி.நாகரத்னா தலைமையி லான அமர்வு, 6 வாரங்களுக்குள் தீர்ப்பை வெளியிட உயர்நீதிமன்றத் திற்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற தனி அமர்வு எம்.பி.யின் தண்டனைக்கு தடை விதிக்க மறுத்துள்ளது.
மீண்டும் நிலநடுக்கம்
துருக்கி - சிரியா நாடுகளில் ஏற் பட்ட நிலநடுக்கத்திற்கு பிறகு, நாட் டின் வடமாநிலங்களில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது தொடர் நிகழ் வாகி இருக்கிறது. ஞாயிறன்று அசாம் மாநிலத்திலும், திங்களன்று ஹரியானா, உத்தரகண்ட், இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்க ளில் லேசான அளவில் நிலநடுக்கம் ஏற் பட்டது. இந்நிலையில், செவ்வாயன்று நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 300 கி.மீ தொலைவில், மதியம் 2.51 மணிக்கு 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக் கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் தில்லி, ராஜஸ்தான், வடக்கு உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர். நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் பாதிப்புகள் தொடர்பாக இதுவரை எவ்வித தகவ லும் வெளியாகவில்லை என்பது குறிப்பி டத்தக்கது.
வணிக சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு சிபிஐ கண்டனம்
சென்னை, அக். 3- வணிக சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய பாஜக அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் எண்ணெய் நிறுவனங்கள் வணிகவகை சமையல் எரிவாயு சிலிண்டர்விலையை 203 ரூபாய் உயர்த்தி யுள்ளது. இதன் காரணமாக 19 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் 1898 ரூபாயாக உயர்ந்துள் ளது. கடந்த ஆகஸ்ட் மாதம்சிலிண்டர் விலை ரூ. 200 குறைக் கப்பட்டதாக ஆரவார முழக்கம் செய்தனர். ஆனால், தற்போது வணிக நிறுவனங்கள் ஆகஸ்ட் மாதம் கொடுத்த விலையைக் காட்டிலும் சிலிண்டருக்கு ரூ.46 அதிகம் தர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு தேனீர் கடைகள், உணவகங்கள், தெரு வோர வணிகம் என பல பிரிவினரையும் கடுமை யாக பாதிப்பதுடன், இதன் வழி சேவைபெறும் பொதுமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலாகும். விலை குறைப்பு செய்தது போல் நாடகமாடி, முன்னிலும் அதிக மான விலை ஏற்றி மக்களை வஞ்சித்து வரும் ஒன்றிய அரசின் மக்கள் விரோத செயலை வன்மை யாக கண்டிப்பதுடன், உயர்த்தப்பட்ட விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை, அக். 3- தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளதால் தமிழ்நாடு, புதுச்சேரி மாநி லங்களில் அக்டோபர் 4ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப் படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமானமழை பெய்யக்கூடும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.
டி.டி.எஃப் வாசன் காவல் நீட்டிப்பு
காஞ்சிபுரம், அக்.3- பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பைக் ஓட்டி, கைதான டி.டி.எஃப் வாசனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கெனவே, அளிக்கப்பட்ட காவல் செவ்வாயுடன் நிறைவடையும் நிலையில், மேலும் அக்டோபர் 16ஆம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டது.
வீடு திரும்பினார் திருமாவளவன்
சென்னை, அக். 3- சென்னை, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 25ஆம் தேதி இரவு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டார், இந்நிலையில் அவர் குணமடைந்து செவ்வாயன்று (அக். 3) வீடு திரும்பினார். மேலும் சில நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.