சென்னை, செப். 19- கவிஞர் தமிழ் ஒளிக்கு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் மார்பளவு சிலையும் பள்ளி மாணவர்களின் தமிழ் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகை யில் பரிசுகள் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அறிவித்திருக்கிறார். கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக் குழுவினர், தமிழ் ஒளியின் நூற்றாண்டையொட்டி முதல மைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பல்வேறு கோரிக்கைகள் விடுத்த னர். இதையடுத்து, முதலமைச்சர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு வருமாறு:- கவிஞர் தமிழ்ஒளி செப்டம்பர் 29, 1924-ஆம் ஆண்டு குறிஞ்சிப் பாடியை அடுத்த ஆடூர் கிரா மத்தில் பிறந்தார். விசயரங்கம் என்பது கவிஞர் தமிழ் ஒளியின் இயற்பெயராகும். பாரதியின் வழித்தோன்றலாகவும் பாரதிதா சனின் மாணவராகவும் விளங்கி கவிதைகளை படைத்தவர். கவிதைகள் மட்டுமல்லாது கதைகள், கட்டுரைகள், இலக்கி யத் திறனாய்வுகள், மேடை நாட கங்கள், குழந்தைப் பாடல்கள் எனப் பல இயற்றியவர். தாழ்த்தப் பட்ட மக்களின் இழி நிலை கண்டு, அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும் சமூகத்தில் நிலவும் சாதிய வேறுபாடுகளை யும் சாடி கவிதைகள் எழுதியவர். கவிஞர் தமிழ் ஒளியின் கவிதை கள் தனித் தன்மை வாய்ந்தவை, தொடக்கக் காலத்தில் திராவிடர் கழகத்தைச் சார்ந்தவராக இருந்த போதிலும் பொதுவுடைமைக் கொள்கையை உயிர் மூச்சாகக் கொண்டிருந்தார். உலகத் தொழிலாளர்களின் உரிமை நாளான மே தினத்தை வரவேற்றுப் பாடினார். கவிஞர் தமிழ் ஒளியின் சிறு கதைக ளில் வரும் பாத்திரங்கள் பெரும்பா லோர், ஒடுக்கப்பட்டவர்கள், தொழிலாளர்கள், போராளிகள் என அடித்தட்டு மக்களாகவே இருந்தார்கள். இடதுசாரி சிந்தனை உள்ள தனது படைப்பாக்கங்களில் கவிஞர் தமிழ்ஒளி சாதியத்தையும்
விளிம்பு நிலை மக்களின் விடு தலையையும் பாடினார். தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் உறுப்பினராக இருந்தார். இந்நிலையில் கவிஞர் தமிழ் ஒளியின் நூற்றாண்டை முன்னிட்டு கவிஞர் தமிழ் ஒளிக்கு தஞ்சாவூரி லுள்ள தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மார்பளவு சிலை அமைக்கப்படும். மேலும் பள்ளி மாணவர்களின் தமிழ் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் ரூ. 50 லட்சம் ரூபாய் வங்கியில் வைப்புத் தொகையை செலுத்தி, கிடைக்கப்பெறும் வட்டித் தொகையிலிருந்து ஆண்டு தோறும் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் தமிழ் சார்ந்த போட்டிகள் நடத்தி கவிஞர் தமிழ் ஒளி பெயரில் பரிசுகள் வழங்கப் படும். இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார். முதலமைச்சருக்கு நன்றி கவிஞர் தமிழ்ஒளிக்கு சிலை அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்ட முதல மைச்சருக்கு கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக் குழு சார்பில் தலைவர் ‘சிகரம்’ ச. செந்தில்நா தன், செயலாளர் இரா. தெ. முத்து, பொருளாளர் வே. மணி ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.