சென்னை, செப்.9- தமிழ்நாட்டில் குடும்ப தலைவி களுக்கு மாதம் ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை அரசு இந்த மாதம் முதல் செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தில் இணைய தமிழகம் முழுவதும் ஒரு கோடியே 63 லட்சம் பெண் கள் விண்ணப்பித்தனர். விண்ணப் பித்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு தகுதியான விண்ணப்பதாரர்கள் அடையா ளம் கண்டு தேர்வு செய்துள்ள னர். ஒரு வாரம் நடந்த இந்த கள ஆய்வு நிறைவடைந்து விட்டது. மாதம் தோறும் உரிமைத் தொகை அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். எனவே பயனாளி களுக்கு வங்கி கணக்கு அவசி யம். வங்கி கணக்கு இல்லாத வர்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கி அல்லது கூட்டுறவு வங்கி யில் வங்கி கணக்கு தொடங்க அறிவுறுத்தப்பட்டனர். தற்போது தகுதியான பெண்களுக்கு வழங்குவதற்கான ஏடிஎம் அட்டை பிரத்யேகமாக தயாராகி வருகிறது. ரூபே கார்டு வழங்கப்படும். இந்த அட்டை மூலம் பணத்தை எடுத்து கொள்ள முடியும். இந்த திட்டத்தை அண்ணா பிறந்த நாளான வருகிற 15 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காஞ்சி புரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தொடங்கி வைக்கிறார்.முதலமைச்சர் தொடங்கி வைத்த தும் அனைவரது வங்கி கணக் கிற்கு ரூ.1000 சென்று விடும். அடுத்த மாதம் முதல் மாதந்தோறும் 1 ஆம் தேதி வந்து விடும். குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் ஏடிஎம் அட்டை, ரேசன் கடைகள் மூலம் விநியோ கிக்கப்படும் என்று கூறப்பட்டுள் ளது. நிராகரிக்கப்பட்ட விண்ணப் பதாரர்கள் அவர்கள் பகுதி ஆர்.டி.ஓ.விடம் சென்று முறை யிட்டு நிவாரணம் தேடிக் கொள்ள லாம் என ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.