states

விளைபொருளுக்கு விலை தீர்மானிக்க சூத்திரம் உருவாக்கிய விஞ்ஞானி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:  இந்தியாவில் பசுமைப் புரட்சியின் முன்னோடியாகக் கருதப்பட்ட புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வியாழக்கிழமையன்று  98ஆவது வயதில் மரணம் அடைந்துள்ளார். அவருடைய மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அர சியல் தலைமைக்குழு தன் ஆழ்ந்த அஞ்சலியை செலுத்திக் கொள்கிறது. எம்.எஸ். சுவாமிநாதன்  1960களில் அதிக விளைச்சலைத் தரக்கூடிய  அரிசி மற்றும் கோதுமை ரகங் களைக் கண்டுபிடித்ததற்காக, 1987இல் உருவாக்கப்பட்ட  உலக உணவுப் பரிசினை வென்ற முதல் நப ராவார். அதில் கிடைத்த நிதியைக் கொண்டு அவர் 1988 இல் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி ஃபவுண் டேஷனை நிறுவினார்.  விவசாயிகளுக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் என்ற முறையில் அவர் விவசாயிகள் விளைவித்திடும் விளைபொருள் களுக்கு உற்பத்திச் செலவீனத்துடன் சேர்த்து 50 விழுக்காடு கூடுதலாக விலை நிர்ணயம் செய்யப்பட்டு, குறைந்தபட்ச ஆதார விலை நிர்ண யம் செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரை வழங்கியிருந்தார். இந்த முக்கியமான கோரிக்கையை முன்வைத்துத்தான் விவசாயிகளின் வரலாறு படைத்திட்ட போராட்டம் நடைபெற்றது. இதனை வழங்குவ தாக மோடி அரசாங்கம் உறுதி அளித்திருந்த போதிலும் இது இன்ன மும் நிறைவேற்றப்படவில்லை. வேளாண் விஞ்ஞானி எம். எஸ்.சுவாமிநாதனை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், அவரை நேசித்திடும் அனைவருக் கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு தன் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரி வித்துக்கொள்கிறது.