states

img

வெகுமக்களுடன் உயிர்ப்புமிக்க தொடர்பு கொண்ட புரட்சியாளர்

திருச்சி மாவட்டம் பொதுவுடமை இயக்கத் திற்கு தந்த ஆளுமைகள் ஏராளம். தோழர்கள் ஆர்.உமாநாத், பி.ராமச்சந்திரன், பாப்பா  உமாநாத், கே.அனந்தநம்பியார், எம்.கல்யாண சுந்தரம் என அந்த பட்டியல் நீளும். அந்த பட்டியலில் வைத்து மெச்சத்தக்க ஓர் ஆளுமையாக விளங்கியவர் தோழர் கே.வரதராசன். நெல்லையிலே அரசு ஊழியராக தனது பணியைத் துவங்கி பாலவிநாயகம் போன்ற தோழர்கள் அறிமுகத்தால் கட்சியின் பால் ஈர்க்கப்பட்டு முழுநேரப் புரட்சியாளரானார். ஒன்றுபட்ட திருச்சி மாவட்டத்தில் அவர் இயக்கப் பணியாற்றி, பின்னர் பல பொறுப்புகளில் அவர் செயலாற்றி, மாவட்ட செயலாளராக, மாநில செயற்குழு உறுப்பினராக, அரசியல் தலைமைக்குழு உறுப்பின ராக என பலத்தளங்களில் அவர் செயல்பட்டவர். ஆரம்பம் முதல் கிராமப்புற இயக்கத்தை கட்டுவதிலேயே அவர் முன்னுரிமை அளித்தவர். விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளராக பொறுப்பேற்று ராஜஸ்தானில் நடைபெற்ற பிரம்மாண்டமான விவசாயப் போராட்டம் உட்பட ஏராளமான இயக்கங்களுக்கு வழிகாட்டியவர்.  கம்யூனிஸ்ட் இயக்கம் மேலிருந்து கட்டுவது என்பதே சாத்தியம்;

அதை புரிந்து இயக்கம் இல்லாத பகுதிகளில் பொருத்தமான தோழர்களுக்கு பொருப்பு கொடுத்து இயக்க விரிவாக்கத்திற்கு திட்டமிட்டவர்.   தேர்தல் பணியாக இருந்தாலும் அதில் அடைந்த உடனடி வெற்றி, தோல்விகள் மட்டுமல்ல; அந்த தேர்தல் கால தொடர்புகளை அமைப்பாக்கி கட்சி விரிவாக்கத்திற்கு முயற்சிப்பதுதான் உண்மையான கம்யூனிஸ்ட் தேர்தல் பணி என எடுத்துச்சொல்வார்.  கட்சியின் கொல்கத்தா பிளீனம் வெகுமக்களுடனான உயிர்ப்புமிகக் தொடர்பின்  அவசியத்தை வலியுறுத்தியுள்ளது. கட்சித்தலைவர்கள் மக்களுடன் நெருக்கமான தொடர்புடன் இருப்பதையும், அவர்களின் பிரச்சனைகளை யும், உணர்வுகளையும் உள்வாங்கி வழிகாட்டுவது என பிளினீம் வழிகாட்டியது. இந்த நடைமுறையை தனது கட்சி வாழ்க்கையில் சிறப்பாக அமலாக்கியவர் தோழர் கே.வரதராசன்   நகைச்சுவை உணர்வுடன் பேசுவார். மேடையில் பேசி தன்னை சுற்றி இருப்பவர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் தம் கருத்தை சொல்வார். கலை, இலக்கியம், கலைக்குழுக்களுக்கு வழிகாட்டுவது என கலை உணர்வுடன் செயல்பட்டவர்.  இந்திய தத்துவ தரிசனம் என அவர் எழுதிய நூல் தத்துவம் குறித்து ஆரம்ப நிலையில் உள்ள தோழர்களுக்கு ஒருகையேடு போல விளங்கும்.    

இன்று (மே 16) தோழர் கே.வரதராசன் நினைவு நாள்