நூற்றுக்கணக்கான நாவல்கள், சிறு கதைகள், விமர்சனக் கட்டுரைகளை படைத்த புகழ்பெற்ற எழுத்தாளர் முல்க் ராஜ் ஆனந்த் 1905 டிசம்பர் 12 அன்று பெஷா வரில் (தற்போதைய பாகிஸ்தானில்) பிறந்தார். ஆங்கிலத்தில் இந்திய நாவல் களை தோற்றுவித்தவர். இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்கள் சந்திக்கும் துயரங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர். ஏழை மக்கள் எப்படிப்பட்ட துயரமான வாழ்க்கையை வாழ்கின்றனர் என்பதை தனது எழுத்துக்கள் மூலம் எடுத்துக் காட்டியவர். சர்வதேச அளவில் வாசகர்களைப் பெற்ற இந்திய எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். ஒடுக்கப்பட்ட மக்களின் அவலநிலையை படம் பிடித்த இவரது எழுத்துக்கள், நவீன இந்திய ஆங்கில இலக்கியத்தின் மிகச்சிறந்த படைப்பாகும். சாதிய அமைப்பின் கொடூரம் தன் குடும்பத்தில் ஏற்படுத்திய சோகத்தின் விளைவுதான், இவர் இலக்கியப் பயணத்திற்கு வரக் காரணமாக அமைந்தது. இவரது உறவினர் (அத்தை/சித்தி) ஒருவர், தனது உணவை இஸ்லாமியப் பெண்ணுடன் பகிர்ந்ததற்காக, குடும்பத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த உறவினர், தற்கொலை முடிவை நாடினார். இச்சம்பவம் முல்க் ராஜ் ஆனந்தின் மனதில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் வெளிப்பாடாக, தனது முதல் உரைநடை கட்டுரையை எழுதினார். இவரது முதல் நாவலான ‘தீண்டாமை’ (Untouchable) 1935இல் வெளியிடப்பட்டது. இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்க ளின் துயர்மிக்க நிலையை இந்நாவல் மூலம் காண்பித்தார். ஆனந்த், ‘மார்க்’ என்ற இலக்கிய இதழை நிறுவினார். இலக்கி யம் மற்றும் கல்வியில் பெரும் பங்காற்றிய முல்க் ராஜ் ஆனந்துக்கு, 1967 இல் இந்தியாவின் மிக உயரிய விருதான பத்ம பூஷண் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும், அவரது ‘ஏழு கோடைகள்’ (Seven Summers) என்ற ஏழு பாகங்கள் கொண்ட நூலின் ஒரு பாகத்துக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. 2004 செப்டம்பர் 28 அன்று, தனது 98 ஆவது வயதில் காலமானார்.