states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

காலிஸ்தான் சார்பு அமைப்பான “வாரிஸ் பஞ்சாப் டி” தலைவரும், சீக்கிய மத போதகருமான அம்ரித்பால் சிங், அவரது உதவியாளர்களைக் கைது செய்வதற்கான நட வடிக்கையில் பஞ்சாப் காவல்துறை களமிறங்கி யுள்ள நிலையில், பஞ்  சாப் மாநிலத்தில் சனி யன்று முதல் ஞாயிறன்று நண்பகல் 12 மணி வரை எஸ்எம்எஸ் சேவை கள், மொபைல் இணை யச் சேவைகள் நிறுத்தப்  பட்டுள்ளதாக அறி விக்கப்பட்டுள்ளது.

பிரபல கப்பல் சரக்குப் போக்குவரத்து நிறுவன மான எவர்கிரீன் தனது  நிறுவனத்தில் பணியாற்  றும் 3,100 ஊழியர் களுக்கு 50 மாத சம்ப ளத்தை போனஸாக வழங்குவதாக அறிவித் துள்ளது. இதற்காக ரூ. 518 கோடி ஒதுக்கி அறி விப்பாணை வெளி யிட்டுள்ளது. பொருளா தார நெருக்கடியால் உல கம் முழுவதும் வேலை யிழப்பு, ஆட்குறைப்பு நடவடிக்கை அரங்கேறி வரும் நிலையில், ஜப்பா னைச் சேர்ந்த எவர்கிரீன் நிறுவனம் போனஸ் அறி வித்திருப்பது அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.

தில்லியில் கடந்த சில நாட்களாக வெப்பம் கொளுத்தி வந்த நிலை யில், சனியன்று வானிலை நிலவரம் முற்றிலும் மாறி ஆலங்கட்டி மழை பெய்  தது. மேலும் பகல் நேரத்தி லேயே இருண்ட நிலை யுடன் குளிர்ந்த சீதோஷ்ண நிலைக்கு மாறியது. தில்லி மட்டு மின்றி நொய்டாவை சுற்றியுள்ள பிற நகரங்களி லும் மழை பெய்தது.

 அமெரிக்காவின் புளோ ரிடாவில் உள்ள விப்ரோ நிறுவன கிளை, தனது நிறுவனத்தில் உள்ள 120 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறி வித்துள்ளது. பெங்க ளூரை தலைமையிடமாக கொண்ட இந்திய நிறு வனமான விப்ரோ அமெ ரிக்காவில் 20-க்கும் மேற்  பட்ட கிளைகள் வைத் துள்ள நிலையில், ஒரு கிளையில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட ஊழி யர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தி ருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக சர்வதேச நிறு வனங்கள் உலகம் முழு வதும் ஊழியர்கள் பணி நீக்கம் குறித்த அறி விப்பை வெளியிடும், ஆனால் விப்ரோ ஒரு கிளையில் மட்டும் அறி வித்துள்ளதால் அதிர்ச் சிக்கு காரணமாக உள்ளது.
 

திருமணம் செய்வதாக கூறி பெண்ணிடம் மோசடி செய்த சிறை நன்னடத்தை அதிகாரி சத்தியமூர்த்திக்கு ஆயுள் தண்டனையும், சத்திய மூர்த்தி ரூ.21,000, பெற்  றோருக்கு தலா ரூ. 10,000 அபராதமும் விதித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அதானியை பாது காப்பதற்காகவே நாடா ளுமன்றம் முடக்கப்படு கிறது என விசிக தலை வர் திருமாவளவன் எம்பி பேசியுள்ளார்.

உலகச் செய்திகள்

அக்டோபர் 22 ஆம் தேதியன்று அர்ஜெண்டினாவில் பொதுத் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. இந்தத் தேர்தல்களில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, 24 செனட் உறுப்பினர்கள் உள்ளிட்ட பல மட்டங்களுக்கு வாக்கெடுப்பு நடைபெறும். முதல்கட்டத் தேர்தல்  ஆகஸ்டு 13 ஆம் தேதியன்று நடைபெறும். கட்சிகள் தங்கள் வேட்பா ளர்கள் பட்டியலை முன்வைக்க வேண்டும். அதில் குறைந்தது 1.5 விழுக்காடு வாக்குகள் பெறுபவர்கள்தான் அக்டோபர் 22 அன்று நடக்கும் தேர்தல்களில் பங்கேற்க முடியும்.

ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் மக்கள் விரோத ஓய்வூதி யத் திட்டத்திற்கு எதிராக பிரான்ஸ் மக்கள் போராடிக் கொண்டி ருக்கிறார்கள். தூய்மைப் பணியாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தலைநகர் பாரிசில் 10 ஆயிரம் டன் குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன. பிரான்ஸ் அரசு, பாரிஸ் மேயர் அன்னி ஹிடால்கோவிடம், பணியாளர்களை நிர்ப்பந்திக்குமாறு வலியுறுத்தியது. அப்படிப் போராடும் தொழிலாளர்களை கட்டா யப்படுத்த முடியாது என்று மேயர் மறுத்துவிட்டார்.

ஸ்விட்சர்லாந்து தேசிய வங்கியிடம் இருந்து பல நூறு கோடி அமெரிக்க டாலரைக் கடனாக வாங்கப் போவதாக நெருக்கடியில் உள்ள கிரெடிட் ஸ்விஸ் வங்கி அறிவித்திருக்கிறது. இந்த வங்கிதான் ஸ்விட்சர்லாந்தின் இரண்டாவது பெரிய வங்கியா கும். கடந்த சில நாட்களில் வங்கி சந்தித்து வரும் நெருக்கடியால் அதன் பங்குகளின் விலையில் 30 விழுக்காடு சரிவு ஏற்பட்டிருக்கிறது. வங்கியின் வரலாற்றில் இதுவரையில் இப்படியொரு சரிவு ஏற்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.