states

img

ஆளுநர் மாளிகை சம்பவத்தின் பின்னணியில் திட்டமிட்ட சதி

கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்த பாஜக வழக்கறிஞர் அணி செயலாளர்?

சென்னை, அக். 28 - ஆளுநர் மாளிகை வளாகம் அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம், தமிழக  அரசுக்கு எதிரான சதியாக இருக்கலாம் என்று சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி  இரண்டு நாட்களுக்கு முன்பு பேட்டியில் கூறி யிருந்தார். அதற்கேற்ப, ஆளுநர் மாளிகை வெளி யிட்ட டுவிட்டர் பதிவு, புகார் கடிதம் ஆகி யவை பொய்யாக புனையப்பட்ட ஒன்று என  அம்பலப்படுத்திய தமிழ்நாடு காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால், சிசிடிவி ஆதாரங்க ளையும் மக்கள் மத்தியில் வெளியிட்டார். இதனிடையே, பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்ட கருக்கா வினோத்தை, ஜாமீ னில் எடுத்ததே பாஜக வழக்கறிஞர் பிரிவு  மாவட்டச் செயலாளர்தான் என்று வெளி யாகி இருக்கும் தகவல், ஆளுநர் மாளிகை  விவகாரத்தின் பின்னணியில் பாஜக இருக்கி றதோ என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 10  அன்று நள்ளிரவு 1.30-க்கு பாஜக தலைமை  அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல்  குண்டு வீசப்பட்டது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், வினோத் (எ) கருக்கா வினோத்தை கைது செய்தனர்.

கடந்த 15 மாதங்களாக புழல் சிறையில் இருந்த கருக்கா வினோத் 18.07.23 அன்று ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை  அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு 19.07.23 அன்று விசா ரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அன்றே கருக்கா வினோத்திற்கு நிபந்த னையுடன் கூடிய ஜாமீன் கிடைக்கிறது. அவ ருக்கு ஜாமீன் பெற்றுத் தந்த வழக்கறிஞர் பெயர் பி. முத்தமிழ் செல்வகுமார். இவர் திரு வாரூர் மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு செயலாளர். அதாவது, பாஜக தலைமை அலு வலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வினோத்திற்கு, பாஜக வழக்கறிஞர் பிரிவு செயலாளரே ஜாமீன் பெற்றுத் தந்துள்ளார். அவ்வாறு பாஜக வழக்கறிஞரின் உதவி யுடன் 20.07.23 அன்று சிறையில் இருந்து வெளியே வந்த கருக்கா வினோத்-தான் 3 மாதங்களுக்குப் பிறகு, ஆளுநர் மாளிகை வளாகம் அருகே- பெட்ரோல் குண்டு வீசிய தாக கைது செய்யப்பட்டுள்ளார். பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டபோதே- அந்த சம்பவம் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியது. தமிழ்  நாட்டில் பாஜக தலைவர்கள், தங்கள் வீடு களில் தாங்களே பெட்ரோல் குண்டுகளை வீசி, அதன்மூலம் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காட்டி, பப்ளிசிட்டி தேடும் முயற்சியில் ஈடுபட்டதுடன்,

இஸ்லாமிய அமைப்புக்கள் மீது பழிபோடும் சம்பவங்கள் நடந்த நிலையில், இதுவும் அப்படியான ஒரு முயற்சியாக இருக்குமோ? என்ற யூகிக்க வைத்தது. இந்நிலையில், பாஜக அலுவலகம் மீது குண்டுவீசிய நபரை, பாஜக வழக்கறிஞர் ஒரு வரே ஜாமீன் எடுத்திருப்பதும், அவ்வாறு விடு தலையான கருக்கா வினோத், 3 மாதங்களில் ஆளுநர் மாளிகை வளாகம் அருகே பெட் ரோல் குண்டு வீசி கைதாகி இருப்பதும், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் பாஜக தூண்டுதல் இருக்குமோ? என்று மீண்டும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், குட்டு வெளிப்பட்டு விட்டதே என்று பதற்றத்தில், 2020-ஆம்  ஆண்டே வழக்கறிஞர் முத்தமிழ் செல்வ குமாரை, கட்சியிலிருந்து நீக்கி விட்டதாக பாஜக மாநிலத் தலைமையும், பாஜக-வை விட்டு விலகிவிட்டேன் என்று முத்தமிழ் செல்வகுமாரும் அலறியடித்துக் கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர். ஆனால், 2020-ஆம் ஆண்டு முத்தமிழ் செல்வகுமாரை பாஜக நீக்கினாலும், 2022-ஆம் ஆண்டு ஜூலை 8 அன்று முத்தமிழ் செல்வகுமாரை பாஜக மீண்டும் சேர்த்துக் கொண்டதாகவும், அவரை திருவாரூர் மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு மாவட் டச் செயலாளராக நியமித்ததாகவும் தக வல்கள் வெளியாகியுள்ளன. கருக்கா வினோத்திற்காக, முத்தமிழ் செல்வகுமார் ஆஜரானதற்கான ஆவண மும், அத்துடன் அவர் பாஜகவின் வழக்கறி ஞர் பிரிவில் பொறுப்பில் இருப்பதற்கான அறிக்கை ஒன்றும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.