states

புதிதாக புற்றுநோய் மேலாண்மை இயக்கம்: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னை, பிப்,19-  தமிழக பட்ஜெட் 2024-25-ல் மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத் துறைக்கு 20,198 கோடி  ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளதாகவும், இந்த நிதியாண்டில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத் துக்காக 243 கோடி ரூபாய் ஒதுக்கப் படுவதாகவும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார். அவர் தனது உரையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.  மக்களைத் தேடி மருத்துவ  திட்டத் துக்காக 243 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.  மருத்துவக் காப்பீட் டினைப் பயன்படுத்தி நோயாளி களுக்கு சிகிச்சை அளிப்பதில், அரசு மருத்துவமனைகளின் பங்களிப்பை 50 சதவீதத்துக்கும் மேலாக உயர்த்தி, நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இந்த மருத்துவமனைகளில் கட்ட மைப்பை மேலும் மேம்படுத்தி, உயர் சேவைகளை வழங்குவதற்காக காப்பீட்டுத் தொகுப்பு நிதியிலிருந்து 200 கோடி ரூபாய் செலவிடப்படும்.  2 லட்சம் நபர்களுக்கு மேல் பயன் பெற்றுள்ள நாட்டிலேயே முன்னோடி யான இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டத்தை மேலும் மேம் படுத்திட இந்த அரசு முனைந்துள் ளது. விபத்து நடந்த முதல் 48 மணி நேரத்தில் வழங்கப்படும் இலவச சிகிச்சைக்கான உச்சவரம்புத் தொகை ஒரு லட்சம் ரூபாயிலிருந்து இரண்டு லட்சம் ரூபாயாக உயர்த்த ப்படும்.  மாநிலம் முழுவதிலும் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் நோய் கண்டறிதல் சேவைகளுக் கான கட்டமைப்பு வசதிகள் வரும் நிதியாண்டில் மேலும் மேம்படுத் தப்படும். ராமேஸ்வரம், செந்துறை, ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம் ஆகிய மருத்துவமனைகளிலும், தேனி மற்றும் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைகளிலும், 50 படுக்கைகள் கொண்ட 6 தீவிர சிகிச்சைப் பிரிவுகள் 142 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப் படும் உள்ளிட்ட அறிவிப்புகளையும்  அமைச்சர் வெளியிட்டார்.