மலையக, தாயகம் திரும்பிய தமிழருக்கான இயக்கம் சார்பில் ‘மலையகம் 200’ என்ற தலைப்பில் பன்னாட்டு மாநாடு கோவையில் ஞாயிறன்று நடைபெற்றது. 200 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு கூலித் தொழிலாளர்களாக கொண்டு செல்லப்பட்ட மலையகத் தமிழர்களின் கோரிக்கைகள் இம்மாநாட்டில் விவாதிக்கப்பட்டன. மாநாட்டிற்கு மலையக, தாயகம் திரும்பிய தமிழருக்கான இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மு.சி.கந்தையா தலைமையேற்றார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா எம்.பி., சிபிஐ மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் மு.வீரபாண்டியன், இலங்கை தமிழர் நல ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவர் மருத்துவர் கலாநிதி வீராசாமி எம்.பி., ஆதித் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் இரவிக்குமார், தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு, தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தலைவர் மீ.த.பாண்டியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.