states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

இந்தோனேசியாவின் தனிம்பார் தீவுகளில் வெள்ளியன்று 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கத்தால் சுனாமி எச்ச ரிக்கை எதுவும் விடப்பட வில்லை. இதேபோல பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பிலிப்பைன்ஸ் பகுதியிலும் திங்களன்று 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட தாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரி வித்து உள்ளது. 

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி யுள்ள பாகிஸ்தான் சுமார் 6 பில்லியன் டாலரை வாங்குவதற்காக சர்வ தேச நாணய நிதியத்து டன் (ஐஎம்எஃப்) ஒப் பந்தம் மேற்கொண்டுள் ளது. “இந்த ஒப்பந்த மானது புற்றுநோய்க்கு ஆஸ்பிரின் மருந்து மூலம்  சிகிச்சை அளிக்கும் முயற்சி போன்று உள்ள தாக” பாகிஸ்தான் முன் னாள் பிரதமர் இம்ரான் கான் நகையுணர்வுடன் குற்றம்சாட்டியுள்ளார். 

செயல்திறனை அதி கரிக்கும் நோக்கில் புதி தாக 470 விமானங்களை வாங்க ஏர் இந்தியா ஒப் பந்தம் செய்துள்ள நிலை யில், புதிய விமானங் களை இயக்க 6,500 விமா னிகள் தேவை என்றும் ஏர் இந்தியா அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

உலகச் செய்திகள்

பெருவின் ஜனாதிபதியாக உள்ள டினா போலுவார்ட்டே, வலதுசாரி சக்திகளிடம் உதவி கேட்டுக் கொண்டிருக்கிறார். இடதுசாரி அமைப்புகளின் ஆதரவுடன், பெட்ரோ காஸ்டில்லோ ஜனாதிபதி வேட்பாளராக நின்று வெற்றி பெற்றபோது, துணை ஜனாதிபதி வேட்பாளராக இருந்து டினா போலுவார்ட்டே வெற்றி  பெற்றார். வலதுசாரிகள் காஸ்டில்லோவை நீக்கியபோது அவர்களு டன் இணைந்து ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்ட போலுவார்ட்டே, முன்னாள் சர்வாதிகாரி கெய்கோ ஃபுஜிமோரியை சந்தித்து அரசியல் பிரச்சனைகளைத் தீர்க்க உதவி கோரியுள்ளார்.

கூடுதல் ராணுவ ஏற்பாடுகளைச் செய்ய ஜப்பானின் பிரதமர் கிஷிடா தலைமையிலான அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்கு எதிராக மக்கள் கூட்டணி 14 அம்சக் கோரிக்கைகளை அரசியல் கட்சிகள் முன்பாக வைத்திருக்கிறது. இன்னும் பல கட்சிகள் அதற்கு பதில் அளிக்காத நிலையில், 14 அம்சக் கோரிக்கைகளையும் ஏற்பதோடு, மக்கள் கூட்டணியோடு இணைந்து போராடுவதற்குத் தயார் என்று ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்திருக்கிறது. 

வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடர பிரிட்டனின் தபால்துறை ஊழியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்கள் மத்தியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 95.9 விழுக்காடு ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடரலாம் என்று வாக்களித்திருக்கிறார்கள். 18 நாட்களாகப் போராடி வரும் ஊழியர்கள், சட்டப்படி ஊழியர்கள் மத்தியில் மீண்டும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதால் அதைச் செய்திருக்கிறார்கள். கடுமையான தாக்குதல்களை மீறி தொழிலாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக ஊழியர் சங்கம் தெரிவித்திருக்கிறது.