states

img

அறிவியல் கதிர் - ரமணா

அணுச்சிதைவில் இயங்கும் பேட்டரி

சீன தொடக்க நிலை நிறுவனம் ஒன்று 50 வருடங்கள் தொடர்ந்து ஆற்றலைக் கொடுக்கும் பேட்டரி ஒன்றை உருவாக்கியுள்ளதாம். இதில் Ni-63 எனும் நிக்கல் மூலகத்தின் அணுச்சிதைவின் மூலம்  கிடைக்கும் ஆற்றல் மின்சாரமாக மாற்றப்படுகிறது. மிக மிக மெல்லிய நிக்கல் அடுக்குகளை யும் வைர செமி கண்டக்கட்டர்களையும் (அரைக் கடத்திகளையும்) கொண்டுள்ளது. அடுக்குகளாக  உள்ள வடிவமைப்பினால் தீ பிடிப்பது அல்லது வெடிப்பது போன்றவை தடுக்கப்படு கிறது. மைனஸ்60 டிகிரி செல்சியசிலிருந்து 120 டிகிரி வரை வெப்பத்தை தாங்கக் கூடியதாம்.  இப்போது நமது கைபேசிகளில் மற்றும் பெரும்பாலான கருவிகளில் பயன்படுத்தப்படும்  லித்தியம் பேட்டரிகள் சில டிகிரி செல்சியசிலிருந்து 45 டிகிரி வரை மட்டுமே  இயங்கும். இந்த பேட்டரி கதிரியக்கம் எதையும் வெளிவிடுவதில்லை என்கிறது அந்த நிறு வனம். ஆகவே பேஸ் மேக்கர், காக்ளியர் போன்ற மருத்துவக் கருவிகளுக்கு உகந்தது. 50 ஆண்டு கள் முடிந்த பின் நிலையான தாமிர மூலமாக மாறுவதால் சுற்றுச் சூழல் பாதிப்பு ஏதும்  இல்லை. நாணய அளவில் இருக்கும். இதிலிருந்து கிடைக்கும் மின்சாரம் 100 மைக்ரோவாட்கள்  அளவே உள்ளது. இது திறன் கைபேசிகள், டிரோன்கள் போன்ற தற்கால சாதனங்களை இயக்கும் அள வுக்கு இல்லை. ஆகவே அதை 2025க்குள் 1 வாட் அளவுக்கு மேம்படுத்தும் முயற்சியில் அந்த நிறுவனம்  இறங்கியுள்ளது. அமெரிக்கா, ரசியா போன்ற நாடுகளும் இத்தகைய சிறிய வகை பேட்டரிகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

இந்தியக் கண்டத்திட்டின் நகர்வும் நில அதிர்வுகளும்

தெற்கு திபெத்தின் குறுக்காக சேகரிக்கப்பட்ட நில அதிர்வு தரவுகள், இமயமலைக்கு அடியில் இயங்கும் பிரம்மாண்ட விசைகள் குறித்து ஆச்சரியமான காட்சியை அளிக்கின்றன. இந்திய கண்டதிட்டு அதன் மேலுள்ள ஈரோசியன் கண்டத்திட்டுடன் உராய்ந்து செல்வதால் சிதைந்து கொண்டிருக்கிறதாம். திபெத்திய பீடபூமியும் இமயமலையும் உயர்த்தப்படுவதற்கு கூறப்படும் இரண்டு மாதிரிகளின் சமரசமே இந்த முன்வைப்பு. இரண்டிலுமே இந்திய மற்றும் ஈரோசிய கண்ட திட்டுகளின் மோதலே காரணமாக கூறப்படுகிறது. 60மில்லியன் ஆண்டுகளுக்கு முன், இந்திய கண்டத்திட்டு அதன் மேல் பகுதியிலிருந்த பாறைகள் உருகிய நீரோட்டத்தால் ஈரோஆசியன் திட்டுக்கு அடியில் செலுத்தப்பட்டதாம். அதன் தோள்கள் மூலம் ஈரோஆசியன் திட்டு சிறிது சிறிதாக உயர்த்தப்பட்டு பூமியின் உயர்ந்த சிகரத்தை அளித்தது. இந்திய கண்ட திட்டின் மேல்பகுதி மற்றும் கடினமான பகுதியின் அடர்த்தி குறித்த ஆய்வுகள் அது அவ்வளவு எளிதாக மூழ்காது என்று காட்டுகின்றன. ஆகவே நீரினுள் அமிழ்ந்திருக்கும் பகுதி இன்னும் ஈரோஆசியன் திட்டுடன் உரசிக் கொண்டிருக்க வேண்டும். முற்றிலுமாக மூழ்கியிருக்காது. இன்னொரு வாய்ப்பு என்னவென்றால் இந்திய கண்டதிட்டின் சில பகுதிகள் சுருங்கி மடியுமாறும் சில பகுதிகள் அமிழ்ந்து மூழ்குமாறும் அது உருக்குலைந்து கொண்டிருக்கிறது என்பதாகும்.

சீனாவின்

கடல்பல்கலைக்கழகத்தை சேர்ந்த புவியியல் இயற்பியலாளர் லின் லியூ ஆய்வாளர் குழு, தெற்கு திபெத்தில் மேற்கு-கிழக்காக நிறுவப்பட்டிருந்த 94 அகலலை நில அதிர்வு நிலயங்களிலிருந்து பெறப்பட்ட மேல்-கீழ் எஸ் அலைவரிசைகளையும் ஷியர் அலைவரிசை தரவுகளையும் அதற்கு சேகரிக்கப்பட்ட ‘முன்-பின்’ பி அலைவரிசை தரவுகளையும் இணைத்து மேலும் நுணக்கமான முடிவுக்கு வந்தனர். அதன்படி இந்திய கண்ட திட்டு ஈரோ ஆசியன் திட்டிற்கு அடியில் வெறுமனே மென்மையாக அமிழ்வதில்லை; அல்லது வழுக்கலான தரையில் இருக்கும் தரைவிரிப்பு போல் சுருளுவதுமில்லை. மாறாக அதன் அடர்த்தியான அடிப்பாகம் ஒரு படலம் போல் உரிந்து மேன்டில் பகுதிக்குள் அமிழ்கிறது. அதேவேளையில் அதன் கனமற்ற மேல்பகுதி மேற்பரப்பின் கீழ் தனது பயணத்தை தொடர்கிறது. இந்த முடிவு கணினி மாதிரிகளுடனும் நிலவியல் மாதிரிகளுடனும் ஒத்துப்போகிறது. கண்ட திட்டுகளின் வரம்புகள் மற்றும் எல்லைகள் ஆகியவற்றின் தெளிவான முப்பரிமாண விளக்கம் நமது பூமிப் பரப்பு எவ்வாறு உருவானது என்பதை தெரிந்து கொள்ள மட்டுமல்ல எதிர்காலத்தில் ஏற்படும் நிலநடுக்கங்களை முன்னறிவிப்பு செய்யவும் உதவும். இந்த ஆய்வு 2023ஆம் ஆண்டு அமெரிக்க புவி இயற்பியல் சங்க மாநாட்டில் சமர்பிக்கப்பட்டது.