ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடையின் பொதுச் செயலாளர் முரளிதரன் வெளி யிட்டுள்ள அறிக்கை: வெளியாகியுள்ள செய்திகளின்படி, முக மது இசார் அவர் இருக்கும் இடத்தில் உள்ள கோவில் ஒன்றின் பிரசாதத்தை சாப்பிட்டார் என்பதற்காக, தூணில் கட்டி வைக்கப்பட்டு அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். குறிப்பிட்ட கால இடைவெளிகளில் இவ் வாறு ஊனமுற்றோரைத் திட்டுவது, தாக்குவது, கொல்வது என்பது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. எனினும், ஊனமுற்ற சிறு பான்மை மக்கள் இவ்வாறு குறிவைத்துத் தாக் கப்படுவது என்பது மிகவும் அபாயகரமான அள விற்குச் சென்றிருக்கிறது. இந்த ஆண்டில் மட் டும் தேசிய ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகளின்படி இது மூன்றாவது கொலை யாகும். பிப்ரவரி 25 அன்று, முகமது ஃபையாஷ் என்னும் ‘மனநலப் பிரச்சனை’யுடன் உள்ள ஒரு முஸ்லிம் இளைஞன், பீகாரில் சமஸ்டிபுர் என்னுமிடத்தில் கும்பல் ஒன்றால் அடித்துக் கொல்லப்பட்டார். பின்னர் ஜூன் 27 அன்று பீகார் மாநிலம் சரன் மாவட்டத்தில் ஊனமுற்ற டிரக் ஓட்டுநர் சகிருதீன் என்னும் 55 வயதுடைய முஸ்லிம் ஒருவர் பசுப் பாதுகாப்புக்குழு குண்டர் கும்பலால் கொல்லப்பட்டார். சென்ற ஆண்டு, மத்தியப் பிரதேசம், நீமுச் என்னுமிடத்தில், பன்வாரியால் ஜெயின் என்னும் ஊனமுற்ற முதியவர் ஒருவர் முஸ்லிம் என சந்தேகத்தின்பேரில் அடித்துக் கொல்லப் பட்டார். இவை அனைத்தும் முஸ்லிம்களுக்கு எதிரான விஷத்தைக் கக்கும் மதவெறிப் பிரச்சா ரத்தின் விளைவுகளேயாகும். சிலர் கைது செய்யப்பட்டுள்ள அதே சம யத்தில் இவ்வழக்குகள் அனைத்தும் முறையே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு நீதி வழங் கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் குடும் பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும். (ந.நி.)