states

img

தீக்கதிர் விரைவு செய்திகள்

 

எதிர்ப்பவர்களுக்கு டெபாசிட் போய்விடும்

அன்பு சகோதரர் ஈவிகேஎஸ் இளங்கோவனை, எதிர்த்துப் போட்டியிடுபவருக்கு டெபாசிட் போய்விட்டது என்று சொல்லுமளவிற்கு மிகப் பெரும்பான்மையான வாக்குகள் வித்தியா சத்திலே, வெற்றி பெறச் செய்வதற்கு எங்கள் கூட்டணி கங்கணம்  கட்டிக்கொண்டிருக்கிறது. காரணம், தமிழகத்திலே நடைபெறு கின்ற ஆட்சியின் மீது நாட்டில் நாளுக்குநாள் மக்கள் மத்தியிலே மதிப்பு உயர்ந்து வருகிறது. ஆளுநர் சனாதன ஆட்சி நடத்துகிறார். இந்தியா முழுவதும் தாங்கள் ஆட்சிக்கு வராத இடங்களில் எங்கும்  ஆளுநரை வைத்து ஆட்சி நடத்துகின்ற அக்கிரமத்தை பாஜக செய்து கொண்டிருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அனைத்து துறையிலும் முதலிடத்தில் இருக்கின்ற திமுக தலை மையிலான கூட்டணி மிகப் பெரிய மகத்தான வெற்றி பெறு வதிலே ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

                   வைகோ, மதிமுக பொதுச் செயலாளர்

அண்ணன் ஓபிஎஸ் அவர்களே!

நான் சட்டமன்றத்தில் பேசியபோது, கமலாலயத்திற்கு மட்டும் போகாதீர்கள் என்று நான் அப்பவே கூறினேன்.  அப்போது அண்ணன் ஓபிஎஸ், எந்தக் காலத்திலும் எங்களது கார்  அங்கு போகாது என்றார். ஆனால், நேற்று காலையில் இரண்டு  பேரும் போட்டிப் போட்டுக் கொண்டு கமலாலயம் சென்று இரண்டு  மணி நேரம் காத்திருக்கின்றனர். அந்தளவுக்கு ஒரு வெட்க மில்லாத எதிர்க்கட்சியாக... இதற்கு மேல் நான் அவர்களை பேச விரும்பவில்லை.

           அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

‘தனி ஆவர்த்தனம்’

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட உள்ளது. தேமுதிக சார்பில் ஈரோடு  கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆனந்த் போட்டியிடுகிறார். வேட்பு மனு தாக்கல் செய்யும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். பாஜக இன்னும் நிலையை அறிவிக்கவில்லை. அதிமுக நான்கு அணி களாக பிரிந்து உள்ளன. அவர்களுக்கு சின்னம் உள்ளதா, இல்  லையா என்ற கேள்வி உள்ளது. அவர்களும் நிலையை அறிவிக்க வில்லை. இந்த நிலையில் தேமுதிக தனித்து களம் காண்கிறது.

              பிரேமலதா, தேமுதிக பொருளாளர்

கமல்ஹாசனும் காங்கிரசும்...

உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், கமல்ஹாச னின் ரத்தத்தில், தேசியமும் காங்கிரசும் கலந்திருப்பது அனைவருக்கும் தெரியும். அவருடைய தந்தை காங்கிரஸ் கட்சி யில் தியாகியாக இருந்தவர். மறைந்த தலைவர் காமராஜருக்கு மிக நெருக்கமான நண்பராக இருந்தவர். எனவே, காங்கிரஸையும் கமல்ஹாசனையும் யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது. இருப்பி னும் அவர் எங்களுக்கு ஆதரவு தரவேண்டும் என்று கேட்டோம். நிர்வாகிகளுடன் கலந்துபேசி முடிவெடுப்பதாக கூறியுள்ளார். ஒரு நல்ல முடிவை அறிவிப்பார். 

                 ஈரோடு கிழக்கு காங்கிரஸ் வேட்பாளர்  ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்


இலை எங்களுக்குத்தான்

அட, நம்புங்க சார்...! த.மா.கா., அ.தி.மு.க. கூட்டணி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறும். எங்களுடைய கூட்டணியில் பா.ஜ.க. வும் உள்ளது. இந்த நிலை தொடரும் என்ற நம்பிக்கை  இருக்கிறது. இன்னும் இரண்டு நாட்களில் நல்ல முடிவு வெளிவரும் என்று எதிர்பார்க்கிறோம். தற்போது உள்ள  அரசியல் சூழ்நிலையில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.  நின்றால் சிறப்பாக இருக்கும் என்பதற்காக தமிழ் மாநில  காங்கிரஸ் அ.தி.மு.க.விற்கு விட்டுக் கொடுத்துள்ளது. இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் இரட்டை  இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவார் என்ற  நம்பிக்கை உள்ளது. இரட்டை இலை சின்னத்தில் நின்  றால் தான் அ.தி.மு.க. வெற்றி பெறும் சூழ்நிலை உள்ளது.  அரசியலில் நம்பிக்கைதான் மிக முக்கியம்.  தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியதிலிருந்து... இலை எங்களுக்குத்தான் கூட்டணிக் கட்சிகளுடன் கலந்துபேசி போட்டி யிட விரும்புவர்களிடமிருந்து விருப்பமனு  பெற்ற பிறகு எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை அறி விக்க உள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்த லில் அ.தி.மு.க. உறுதியாக வெற்றி பெறும் ஈரோடு  கிழக்கு தொகுதி அதிமுகவின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபிப்போம்.  அ.தி.மு.க.வினர் வீடு, வீடாக சென்று வாக்கு சேக ரிப்பார்கள். இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான்  கிடைக்கும்.

         அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

அட, நம்புங்க சார்...!

த.மா.கா., அ.தி.மு.க. கூட்டணி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறும். எங்களுடைய கூட்டணியில் பா.ஜ.க. வும் உள்ளது. இந்த நிலை தொடரும் என்ற நம்பிக்கை  இருக்கிறது. இன்னும் இரண்டு நாட்களில் நல்ல முடிவு வெளிவரும் என்று எதிர்பார்க்கிறோம். தற்போது உள்ள  அரசியல் சூழ்நிலையில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.  நின்றால் சிறப்பாக இருக்கும் என்பதற்காக தமிழ் மாநில  காங்கிரஸ் அ.தி.மு.க.விற்கு விட்டுக் கொடுத்துள்ளது. இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் இரட்டை  இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவார் என்ற  நம்பிக்கை உள்ளது. இரட்டை இலை சின்னத்தில் நின்  றால் தான் அ.தி.மு.க. வெற்றி பெறும் சூழ்நிலை உள்ளது.  அரசியலில் நம்பிக்கைதான் மிக முக்கியம்.  

             தமாகா தலைவர்

 

ஸ்டெர்லைட் கருத்தரங்கு அனுமதி கோரிய வழக்கு ஒத்திவைப்பு

மதுரை, ஜன.23-  ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும்  திறப்பதற்கு கருத்தரங்கு நடத்த அனுமதி கோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  தியாகராஜன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘ஸ்டெர்லைட் தொழிற்சாலை குறித்து அறிவியல் பூர்வமான உண்மை களை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில், விளக்க கருத்தரங்கம் நடத்த அனுமதி வழங்க வேண்டும்’’ என குறிப் பிட்டிருந்தார்.  இந்த மனு திங்களன்று உயர்நீதிமன்ற நீதிபதி முரளி சங்கர் அமர்வில் விசா ரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு  அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் வழக்கில் ஆஜராக கால அவ காசம் கேட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஜனவரி  25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தர விட்டார்.

          ஜி.கே.வாசன் கூறியதிலிருந்து...
 

 

டிஜிபி அலுவலகம் அருகே போராடிய வாலிபர் சங்கத்தினர் மீது வழக்கு

சென்னை, ஜன.23- வேங்கைவயல் சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி, டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த 35 பேர் மீது, காவல்துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவை கலந்த சாதி வெறியர்களை கைது செய்ய வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தி வரு கிறது. அவமான சின்னமாக மாறியுள்ள அந்த தொட்டியை இடிக்கும் போராட்டத் தையும் ஜனவரி 21 அன்று நடத்தியது. இதனையொட்டி முன்னெச்சரிக் கையாக பல மாவட்டங்களில் வாலிபர்  சங்கத் தலைவர்களை காவல்துறை யினர் கைது செய்தனர். தொட்டியை இடிக்கும் போராட்டத்திற்கு சென்ற தலைவர்களையும் கைது செய்தனர். இதனைக் கண்டித்து  உடனடியாக காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) அலுவலகம் அருகே வாலிபர்  சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 35 பேரை காவல் துறையினர் கைது செய்து, பின்னர் விடுவித்தனர். இவர்கள் மீது மெரினா காவல்துறை யினர், ஐபிசி 143(சட்டவிரோதமாக ஒன்று கூடுதல்), 145(கலைந்து செல்ல உத்தரவிட்டும் சட்டவிரோதமாக கூட்டத்தில் இருத்தல், 290 (பொது மக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்துதல்) மற்றும் மாநகர காவல் சட்டம் 41 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தொழிலதிபர் வீட்டில்  300 சவரன் நகை கொள்ளை 

திருச்சி, ஜன.23-  திருவெறும்பூர் அருகே  உள்ள ஐஏஎஸ் நகரில் தொழி லதிபர் நேதாஜி என்பவரது வீட்டில் 300 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.  நிகழ்ச்சி ஒன்றில் பங் கேற்க இவர் திருச்சி சென்றி ருந்த நிலையில், கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து டிஎஸ்பி தலை மையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசா ரணை, கைரேகை நிபுணர்  கள் ஆய்வு, மோப்ப நாய்  உதவியுடன் காவல்துறை யினர் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

‘புல்வாமா குறித்த அறிக்கை எங்கே?’

“புல்வாமாவில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணமடைந்த னர். தாக்குதலின்போது வீரர்கள் விமானம் மூலம் சிகிச்சைக்கு மாற்று இடத்திற்கு கொண்டுசெல்லப்பட வேண்டு மென சிஆர்பிஎப் அதிகாரிகள் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால், பிரதமர் மோடி அதை மறுத்துவிட்டார். எப்படி இவ்வாறான பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது? புல்வாமா தாக்குதல் குறித்த அறிக்கை இதுவரை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. சர்ஜிகல் தாக்குதல் நடத்திய தாக மத்திய பாஜக அரசு கூறுகிறது. ஆனால், அதற்கான ஆதா ரத்தை இதுவரை தாக்கல் செய்யவில்லை. மத்திய பாஜக அரசு பொய்களை மட்டுமே கூறி வருகிறது” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

மகா. ஆளுநர் பதவி விலக முடிவு

மகாராஷ்டிரா மாநில அரசியலில் தொடர் குழப்பங்களை ஏற்படுத்தி வந்த அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ் யபரி பதவி விலக முடிவு செய்துள்ளார். இதுதொடர்பான தக வலை பிரதமர் மோடியிடம் கோஷ்யாரி தெரிவித்துள்ளார். அரசியல் பொறுப்புகளில் இருந்து விடுபட்டு தனது எஞ்சிய காலத்தை எழுத்து, வாசிப்பு மற்றும் பிற நடவடிக்கைகளில் ஈடு பட விரும்புவதாக மகாராஷ்டிர ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் பகத்சிங் கோஷ்யாரி விரை வில் ராஜினாமா செய்வார் அல்லது ஆளுநர் பதவியில் இருந்து அவரை ஒன்றிய அரசு விடுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராகுலுடன் காஷ்மீரி பண்டிட்கள் சந்திப்பு 

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை, ஜம்மு - காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில், சம்பா மாவட்டத்தில் காலையில் ராகுல் காந்தி நடைபயணம் செய்த போது, அவரை காஷ்மீரி புலம்பெயர்ந்த பண்டிட்களின் பிரதிநிதிகள் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது ராகுல் காந்தி யுடன் பல்வேறு விஷயங்கள் குறித்து பண்டிட்கள் பேசினர். 

பிபிசிக்கு எதிராக உச்சநீதிமன்றம்?

குஜராத் கலவரம் தொடர்பான உண்மைகளை, பிபிசி ஆவணப்படம் அம்பலப்படுத்தும் நிலையில், இந்த விவகாரத்தில் மோடியை ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் விடு தலை செய்ததைக் குறிப்பிட்டு சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ சமா ளித்துள்ளார். “காலனி ஆதிக்கத்திற்கு ஆதரவான மனோ பாவம் இந்தியாவில் உள்ள சிலருக்கு இன்னமும் இருக்கிறது.  அவர்கள், உச்ச நீதிமன்றத்தைவிட பிபிசி-யை உயர்வான தாகக் கருதிக்கொண்டிருக்கிறார்கள். இதன்மூலம், அவர்கள்  அந்நிய சக்திகளை திருப்திப்படுத்தும் நோக்கில் இந்தியாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்க முயல்கிறார்கள்’’ என்று கூறியுள்ளார்.

மாநில மொழிகளில் தீர்ப்புகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதரவு

சென்னை,ஜன.23- உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் அனைத்து இந்திய மொழிகளிலும் வெளி யிடப்பட வேண்டும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ள கருத்தை முழு மனதுடன் வரவேற்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “உயர் நீதிமன்றங்களில் மாநில அலுவல் மொழிகளை வழக் காடு மொழியாக்க வேண்டும் என்ற நமது நீண்டநாள் கோரிக்கையையும் நிறைவேற்றுவது நீதியை நாட்டின்  சாமானிய மக்களுக்கு அருகில் கொண்டு வரும்.”என தெரிவித்திருக் கிறார்.

தலைவர்களுடன்  ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சந்திப்பு

சென்னை,ஜன.23- ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக  ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடு கிறார். அவர் திமுக, சிபிஎம் அலுவ லகங்களுக்கு சென்று தலைவர்களை சந்தித்தார். பிறகு,  மதிமுக  பொதுச் செயலாளர் வைகோ சிபிஐ மாநில செயலாளர் இரா. முத்தரசன், விடு தலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோரை சந்தித்தார். பிறகு, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து தனக்கு ஆதரவுக் கோரினார்.

ரூ.3,943 கோடி சொத்துக்கள் மீட்பு

சென்னை,ஜன.23- ராணிப்பேட்டை மாவட்டம், தக்கோ லம் சென்ற இந்து சமய அறநிலை யத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழ்நாடு முழுவதும் இந்து  சமய அறநிலையத்துறை கட்டுப் பாட்டிலுள்ள கோவில்களுக்கு சொந்த மான ரூ.3,943 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இதுவரையில் மீட்கப் பட்டுள்ளது என்றார்.

தமிழ்நாடு-தமிழ் ஆண்டுடன் ஆளுநர் மாளிகை அழைப்பிதழ்

சென்னை,ஜன.23- தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் அரசுக்கும் இடையே இணக்கமான சூழல் இல்லாத காரணத்தால் ஆளுநரை மாற்றக்கோரி திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.  இந்த நிலையில் தமிழ்நாடு என்பதை தமிழகம் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த மாதம் ஒரு நிகழ்ச்சி யில் பேசியிருந்தார். மேலும்,  சட்டப்பேரவையில் உரை யாற்றிய ஆளுநர் தமிழ்நாடு என்ற  வார்த்தையை முற்றிலும் தவிர்த்தார். இந்த அரசு என்றே வாசித்தார். அதுமட்டுமின்றி, அரசு  எழுதிக்கொடுத்த உரையை வாசிக்காமல் அவர் விரும்பம் போல் பலவார்த்தைகளையும் சேர்த்துக்கொண்டார். அம்பேத்கர், பெரியார், அண்ணா,  கலைஞர், திராவிட மாடல் ஆட்சி என்ற வார்த்தைகளை முழுமையாக தவிர்த்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து சட்டப்பேரவையில் தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. அரசியல் அமைப்பு சட்டப்படி செயல்பட வேண்டிய ஆளுநரின்  அநாகரிகம் குறித்து குடியரசுத்  தலைவரிடம் புகார் செய்யப் பட்டது. அது மட்டுமின்றி கிண்டி ஆளு நர் மாளிகையில் நடைபெற்ற பொங்கல் பெருவிழாவின்போது அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழில் ‘தமிழக’ ஆளுநர் என்றும் ஒன்று  அரசு பயன்படுத்தும் அசோக சின்னமும் இடம் பெற்றிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி யது. அதன் பிறகு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு-தமிழகம் என்பதற்கான விரிவான விளக்கம்  அளிக்கம் குறித்த ஒரு அறிக்கை வெளியிட்டார். கிண்டி ஆளுநர் மாளிகையில் வருகிற 26 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெறும் குடியரசு தின வரவேற்பு விழாவுக்காக அச்சடிக்கப்பட்டுள்ள அழைப்பி தழில் தமிழ்நாடு ஆளுநர் என்றும்  திருவள்ளுவர் ஆண்டு தைத்திங் கள் என்றும் தமிழக அரசு லட்சனையும் (முத்திரை) அச்சிடப்பட்டுள்ளது.