states

தீக்கதிர் விரைவு செய்திகள்

‘மிக்ஜம்’ புயல்  இன்று உருவாகிறது

சென்னை,டிச.2- தென்மேற்கு வங்கக்கட லில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு  மண்டலமாக வலுப்பெற் றுள்ளது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு 510  கி.மீ கிழக்கு, தென் கிழக்கில், புதுச்சேரிக்கு 500 கி.மீ கிழக்கு தென் கிழக்கில், நெல்லூருக்கு 630 கி.மீ தென்கிழக்கில் மையம் கொண்டிருந்தது. இது மேலும் வலுவடைந்து ஞாயி றன்று புயலாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் டிசம்பர் 5 அன்று ஆந்திர  மாநிலம் நெல்லூர் - மசூலிப் பட்டனம் இடையே கரை யை கடக்கும் என்று கணிக்கப் பட்டுள்ள நிலையில், இந்த புயலால் டிச. 3, 4 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட வட தமிழ்நாடு மாவட்டங்களில் மிக முதல் அதி கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முதிர்ச்சியற்ற ஒரே அரசியல்வாதி அண்ணாமலைதான்: சி.வி. சண்முகம்

விழுப்புரம், டிச. 2 - “மணல் குவாரி முறைகேடு குறித்து அமலாக்கத்துறை யினர் கணக்கெடுப்பதை பொறுத்தே தெரியும். அது அதிமுக ஆட்சியில் மணல் எடுக்கப்பட்டது குறித்து கணக்கெடுத்து விசாரணை செய்தாலும் அதனை எதிர்கொள்ள நாங்கள் தயா ராக உள்ளோம்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியுள்ளார். மேலும், “தமிழகத்தில் மெச்சூரிட்டி இல்லாத ஒரே அரசியல்வாதி பாஜக தலைவர் அண்ணாமலைதான்” என்றும் சாடியுள்ளார்.

மிக்ஜம் புயல் : 142 ரயில்கள் ரத்து

புதுதில்லி, டிச.2-  மிக்ஜம் புயல் காரணமாக 142 ரயில்களை தெற்கு மத்திய ரயில்வே ரத்து செய்துள்ளது. ‘மிக்ஜம்’ புயல் டிசம்பர் 5-ஆம் தேதி நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே  கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளதால் நாடு முழுவதும்  டிச.7 வரை 142 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள் ளன. ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரங்களை “South Central Railway எக்ஸ் பக்கத்தில்” அறிந்து கொள்ளலாம்.  அண்ணா பல்கலை தேர்வுகள் ஒத்தி வைப்பு கனமழை எச்சரிக்கை காரணமாக டிச.,4-ஆம் தேதி நடக்க விருந்த அண்ணா பல்கலை செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி  வைக்கப்படுவதாக அண்ணா பல்கலை.நிர்வாகம் தெரி வித்துள்ளது. தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறி விக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.47 ஆயிரத்தை கடந்தது தங்கம்

சென்னை, டிச.2- சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 47,000 -யைக் கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சனிக்கிழமை சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 520 உயர்ந்து ரூ.47,320-க்கு விற்பனை செய்யப்படு கிறது. இதன் மூலம் தங்கத்தின் விலை ஆயிரம் ரூபாய்க்கும் மேல் உயர்ந்து ரூ. 47,000-யைத் தாண்டி புதிய உச்சத்தை அடைந்துள்ளது.  ஒரு கிராம் தங்கம் ரூ. 65 உயர்ந்து ரூ.5,915-க்கும் விற்பனையாகி வருகிறது.