states

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் 9 ஆயிரம் பக்கங்கள் பெற்றவர் மாட்டுவண்டியில் ஏற்றிச் சென்றார்

போபால், நவ.5- மத்தியப்பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டம் பைராத் பகுதி யைச் சேர்ந்த தகவல் அறியும் உரி மைச் சட்ட ஆர்வலர் மகான் தகட். இவர் பைடர் நகராட்சியில் பிர தம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் தொடர்பான ஆவணங்களை தரும்படி தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தார்.  இது தொடர்பான ஆவணங் களை பெற நகராட்சி நிர்வாகம்  ரூ.25 ஆயிரம் கட்டணம் செலுத்  தும்படி தெரிவித்தது. இதைய டுத்து, ரூ.25 ஆயிரத்தை மகான்  தகட் நகராட்சிக்குச் செலுத்தினார்.  பணம் செலுத்திய பின்னரும்  இரண்டு மாதங்களாக கேட்ட ஆவ ணங்களை நகராட்சி நிர்வாகம் மகானுக்கு வழங்கவில்லை.  இது தொடர்பாக, குவாலிய ரில் உள்ள நகர்ப்புற நிர்வாக துறை யில் முறையீடு செய்தார். இந்த  முறையீட்டை தொடர்ந்து ஆவ ணங்களை வழங்கும்படி பைடர் நகராட்சிக்கு உத்தரவு பிறப பிக்கப்பட்டது. இந்நிலையில்,  பிறப்பிக்கப்பட்ட உத்தரவை யடுத்து, பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் தொடர்பான ஒன்ப தாயிரம் பக்கங்களை கொண்ட  ஆவணங்களை பெற தகவல் அறி யும் உரிமை சட்ட ஆர்வலர் மகான் தகட் வெள்ளியன்று பைடர் நக ராட்சி அலுவலகத்திற்கு மாட்டு வண்டியில் வந்தார்.  நீண்ட போராட்டத்திற்கு பின் ஆவணங்கள் கிடைத்ததை கொண்டாட எண்ணிய மகான்  தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த மேளதாளம் முழங்க நகராட்சி அலுவலகத்திற்கு வந்தார். அவருக்கு 9 ஆயிரம் பக்க ஆவ ணங்களை அதிகாரிகள் வழங்கி னர். மகான் தகட்டின் நண்பர்கள் நான்கு பேர் ஆவணங்களின் மொத்த பக்கங்களையும் எண்ணி தாங்கள் வந்த மாட்டுவண்டியில் ஏற்றினர். ஆவணங்களை பெற் றுக்கொண்ட மகான் தகட் மாட்டு வண்டியில் புறப்பட்டுச் சென் றார்.