இஸ்ரேலுக்கும், ஹமாஸ் இயக்கத்திற்கும் இடையிலான யுத்தத்தில், குழந்தைகள், பெண்கள் உட்பட அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். இப்போது நெருக்கடி மற்றும் பிரச்சனை ஏற்பட முக்கியக் காரணம் இஸ்ரேலின் கொள் கைகள்தான். இந்த யுத்தத்திற்கு சர்வதேச சமூ கமும் பொறுப்பு. பாலஸ்தீனம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை 800 தீர்மானங்களை நிறை வேற்றியது. ஆனால் இஸ்ரேல் ஒன்றைக் கூட மதிக்கவில்லை, ஏற்கவில்லை. ஆக்கிரமிக்கப் பட்ட பாலஸ்தீன நிலத்தின் மீதான தனது கட்டுப் பாட்டை இஸ்ரேல் விலக்கிக்கொண்டால், தாக்குதல்களும் நிறுத்தப்படும். அமைதி வழியில் தீர்வு பாலஸ்தீனர்களைப் பொறுத்தவரை, என்றுமே பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு எதி ரானவர்கள். தற்போ தைய நெருக்கடிக்கும் அமைதி முறையில் தீர்வுகாணவே பாலஸ்தீனம் விரும்புகிறது. இது தொடர்பாக எங்கள் ஜனாதிபதி பல ஐரோப்பிய நாடுகளுடன் தொடர்பில் இருக்கிறார். இந்தியா தலையிட வேண்டும் இந்திய நாடானது, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளுக்குமே நட்பு நாடு. இதுபோன்ற சூழ்நிலையில், இந்தியா இதில் தலையிட்டு பேச்சுவார்த்தைக்கு உதவ வேண்டும் என விரும்புகிறோம். மோசமான நேதன்யாகு ஆட்சி காசா மாகாணத்திற்கு மின்சாரம் மற்றும் உண வு விநியோகத்தை துண்டிப்பதாக இஸ்ரேல் கூறி யுள்ளது. இது ஒருவகையில் போர் நட வடிக்கை. பெஞ்சமின் நேதன்யாகுவின் ஆட்சி இஸ்ரேலின் வரலாற்றில் மிகவும் மோசமான ஆட்சியாகும்.