சண்டிகர், மே 12- ரூ.100 கோடி அளவிலான மோசடி சைபர் குற்றத்தில் தொடர்பு உடைய 65 பேரை ஹரியானா போலீசார் கைது செய்துள்ளனர். ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பொதுமக்களைக் குறிவைத்து அவர் களிடம் கேஒய்சி (தனிப்பட்ட வங்கி விவரங்கள்) அப்டேட் செய்ய வேண்டும் என்றும், ஆன்லைனில் லோன் ஆப் மூலம் பல லட்சக் கணக்கில் கடன் வாங்கி தருவதாகவும் கூறி மோசடி செய்யும் கும்பல்களின் எண்ணிக்கை நாட்டில் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாரா பகுதியில் பல கோடி ரூபாய் மோசடி செய்த சைபர் கிரைம் கும்பலி டம் தொடர்பு வைத்திருந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். மேலும் நாடு முழுவதும் சைபர் குற்ற மோசடிகள் தொடர்பாக தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஹரியானா மாநில அரசு 5,000 போலீசாருடன் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோத னை நடத்தியது. இந்த சோதனையில் 65 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 250 பேரை அடையாளம் காண ஹரியானா போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
ரூ.100 கோடியில் மோசடி
கைது செய்யப்பட்ட 65 பேர் கொண்ட கும்பல்கள் மீது 28 ஆயிரம் புகார்கள் உள்ளன. இவர்கள் ரூ.100 கோடி அளவிற்கு மோசடியில் ஈடு பட்டுள்ளதாகவும் முதற்கட்ட விசார ணையில் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் சைபர் கிரைம் தொடர் பாக அளிக்கப்பட்ட 1,116 சைபர் புகார்களிலும் 65 பேர் கொண்ட கும்பல் களுக்கு தொடர்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் போலி ஆதார் மூலம் 219 வங்கிக் கணக்குகளில் மோசடியை இக்கும்பல் அரங்கேற்றியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் கைது செய்யப்பட்ட மற்றும் தேடப்பட்டு வரும் கும்பல்களுக்கு “புதிய ஜம்தாரா” கும்பல் என பெயர் வைத்துள்ளது ஹரியானா காவல்துறை. ஜார்க்கண்ட் மாநிலம் “ஜம்தாரா” பகுதியில் பல கோடி மோசடி செய்த சைபர் கிரைம் கும்பலிடம் தொடர்பு வைத்திருந்த ஒரு சிலரை போலீசார் கைது செய்திருந்த னர். இதனை மையமாக கொண்டு “புதிய ஜம்தாரா” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.