கோவை, ஜூன் 25- கோவை, ஜூன். 25 - கோவை மாவட் டத்தில் கொரோன தொற்று 50 எண்ணிக் கையை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தடுப்பு நடவடிக் கையாக பொதுமக்கள் முக கவசம் மற்றும் தனி மனித இடைவெளி ஆகிய வற்றை கடைபிடிக்குமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளனர். முன்னதாக கோவை மாவட்டத் தில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 64 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதுவரை 288 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவ மனைகளில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். ஒற்றை இலக்கத்தில் இருந்து வந்த நிலையில் தற்போது இரட்டை இலக்கத்தை அடைந்து தற் போது நூறு எண்ணிக்கையை நெருங் கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த கோவை மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில், கொரோனா நோய் தொற்று நடவடிக்கைகள் தீவிரப்படுத் தப்பட்டுள்ளன.
இதன்ஒருபகுதியாக சனியன்று கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி. எஸ்.சமீரன் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த காணொளி கூட்டம் நடைபெற்றது. இதில் கோவை மாநகராட்சி ஆணை யாளர் உள்ளிட்ட மாவட்ட அதிகாரி கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவித்துள்ளதாவது, அதிகாரி களுடனான கானொலி கூட்டத்தில், கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்க ளைத் தயார் நிலையில் வைக்க அறிவு றுத்தபட்டது. மேலும், கொரோனா பரி சோதனைகளை அதிகரிக்கவும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற பொது இடங்களில் முகக்கவசம் அணி வது, தனிமனித இடைவெளியைப் கடைபிடிப்பது உள்ளிட்ட கொரோனா விதிகளை முழுமையாக பின்பற்ற உறுதி செய்ய வேண்டும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் அலுவலகங் கள், கல்வி நிறுவனங்கள், வணிக வளா கங்கள், திருமண மண்டபங்கள் போன்ற இடங்களின் சம்பந்தப்பட்ட நிர் வாகங்கள் உள் நுழைபவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யவும், கிருமி நாசினி வைக்கவும் மற்றும் தொடர்ச்சியாக கிருமி நாசினி தெளித் தல் பணியினை மேற்கொள்ளவும் அறி வுறுத்தப்பட்டுள்ளது.
இனி வரும் வாரங்களில் தொற்று அதிகரிப்பை கணக்கில் கொண்டு பொது இடங்களில் முகக்கவசம் அணி யாமல் இருக்கும் நபர்களுக்கு, பொது சுகாதார சட்டத்தின் கீழ் ரூபாய் 500 அப ராதமாக வசூலிக்கவும் அறிவுறுதபட் டுள்ளது. மேலும் கொரோனா தொற்று கண்டறியபட்டவர்களுடன் தொடர் பில் இருந்தவர்களை பற்றிய பட்டி யலை சேகரித்து அவர்களை தனிமை படுத்தும் பணியினையும் தீவிரபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. வைரஸ் உரு மாற்றத்தை உடனுக்குடன் கண்டறிய, வெளிநாடுகளில் இருந்து எவரேனும் நோய்தொற்றுடன் வந்தால், அவர்கள் மாதிரியை மரபணு பகுப்பாய்வு செய் திடவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொது மக்கள் கொரோனா அறி குறிகள் எதேனும் தென்படின் சுயமருத் துவம் செய்திட முயற்சிக்காமல், அரு கில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மருத்துவமனையை அணுகி கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும் இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் முதல் தவணை தடுப்பூசி, மற்றும் 60 வயதை கடந்தவர்கள் இரண்டாம் தவணை முடிந்து 90 நாட்கள் ஆயிருப்பின் பூஸ் டர் தடுப்பூசி என கொரோனா தடுப்பூசி போடாமல் இருப்பவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலை யங்களில் போட்டுக்கொள்ள வேண் டும் என தெரிவித்துள்ளார்.
சேலம் இதேபோன்று சேலம் மாவட்டத் தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில், மீண்டும் தற்போது வேகம் எடுக்க துவங் கியுள்ளது. சேலம் மாவட்டத்தில் கடந்த 22 ஆம் தேதி 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், 23 ஆம் தேதி தொற்று எண்ணிக்கை 13 ஆக உயர்ந் தது. வெள்ளியன்று மேலும் 11 பேருக்கு தொற்று ஏற்பட்டது. தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்கள் மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்ற னர். ஏற்கனவே 48 பேர் சிகிச்சையில் இருந்த நிலையில், வெள்ளியன்று 4 பேர் வீடு திரும்பினர். 55 பேர் வீடு மற் றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இனி வரும் நாட்க ளில் கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பொது மக்கள் முககவசம் அணிவதுடன், சமூக இடைவெளியையும் கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதி காரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.