டாணா புயல் ஒடிசாவில் 50,000 வீடுகளுக்கு இன்னும் மின்சாரம் வழங்கப்படவில்லை
வங்கக்கடலில் உருவான டாணா புயல் வெள்ளியன்று ஒடிசா மாநிலத்தின் பிடர்கனிகா தேசிய பூங்கா - தாம்ரா துறைமுகம் இடையே 120 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கரையை கடந்தது. டாணா புயல் வனப்பகுதியை ஒட்டி கரையை கடந்ததால் உயிர்ச்சேதம் ஏற்பட வில்லை. அதே சமயத்தில் பாலசோர், பத்ரக், கேந்திர பாரா, ஜாஜ்பூர், மயூர் பஞ்ச் ஆகிய பகுதிகளில் விளைநிலங் கள், மரங்கள், சாலைகளை துவம்சம் செய்துவிட்டுச் சென்றது டாணா புயல். இந்நிலையில், டாணா புயல் தொ டர்பான ஆய்வுக்குழுக் கூட்டத்தில் கேந்திரபாரா, பத்ரக் மற்றும் பால சோர் மாவட்டங்களில் புயல் பாதித்த பகுதிகளில் சுமார் 50,000 வீடுகளில் இன்னும் மின்சாரம் வழங்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அதே போல வெள்ளநீரை வெளியேற்ற மாநில அரசு இன்னும் நடவடிக்கை எடுக்காத தால் 30,000 பேர் இன்னும் நிவாரண முகாம்களிலேயே தங்கியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. பாஜக ஆட்சி செய்து வரும் ஒடிசாவில் முதல் வராக மோகன் மாஜி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தீபாவளி: சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சென்னை,அக்.28- தீபாவளி பண்டிகை வரும் 31 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக தமிழகம் முழுவதும் தமிழக அரசுப் போக்குவரத்துத்துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவித்தார். அதன்படி, திங்களன்று (அக்.28) 3 நாட்களுக்கு வழக்கமான பேருந்துகளுடன் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. சென்னையில் 11,176 பேருந்துகள் உட்பட தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இருந்து மொத்தம் 14,086 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் இருந்து 700 சிறப்பு பேருந்துகளும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பிற முக்கிய பகுதிகளுக்கு 330 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக அரசுப் பேருந்துகளில் பயணிக்க இதுவரை 1.22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். சென்னையில் இருந்து மட்டும் பேருந்துகள் வாயிலாக 5 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அமைச்சர் கூறினார். சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஆளுநருக்கு எதிராக பட்டமளிப்பு விழாவை மீண்டும் புறக்கணித்த அமைச்சர்!
சென்னை,அக்.28- கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்ற டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்வில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் ‘திராவிட நல்திருநாடும்’ என்ற வரிகள் இடம் பெறவில்லை. இதற்கு தமிழகத்தில் இருந்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். குறிப்பாக, வேண்டுமென்றே குறிப்பிட்ட வரிகள் நீக்கப்பட்டதாக திமுகவினர் கடுமையாக விமர்சித்தனர். அதன் ஒரு பகுதியாக, பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பட்டமளிப்பு விழாக்களில் ஆளுநருடன் கலந்து கொள்வதை தவிர்க்கும் விதமாக, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் புறக்கணித்து வருகிறார். இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் 45-வது பட்டமளிப்பு விழாவையும் அமைச்சர் கோவி.செழியன் புறக்கணித்துள்ளார். இந்த விழாவில் அரசு சார்பாக உயர்கல்வித்துறை செயலாளர் கோபால் மட்டுமே கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பலர் கலந்து கொண்டனர், லாட்டரி அதிபர் மார்ட்டின் வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவு
சென்னை,அக்.28- கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.7 கோடியே 20 லட்சத்து 5 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. இதில் நாகராஜன், மார்ட்டின், மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் உள்ளிட்டவர்கள் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பரில் போலீசார் ஆலந்தூர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். அதையேற்று நீதிமன்றம் மார்ட்டின் உள்ளிட்டோருக்கு எதிரான இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் திங்களன்று (அக்.28) விசாரணைக்கு வந்தது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “மார்ட்டின் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கை முடித்து வைக்கும்படி அறிக்கை தாக்கல் செய்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே, மார்ட்டின் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை முடித்து வைத்து ஆலந்தூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம். எனவே, இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரும், அமலாக்கத் துறையும் மீண்டும் விசாரிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் வழக்கு குற்றப்பத்திரிகை நகலை பென் டிரைவில் வாங்க மறுப்பு
சென்னை,அக்.28- பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் தலைவர் ஆம்ஸ் ட்ராங் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை நகலை பென்டிரைவ் மூலம் வாங்க மறுத்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 5 ஆயிரம் பக்கங் கள் கொண்ட குற்றப்பத்தி ரிகையை காவல்துறை அண்மையில் தாக்கல் செய்தது. குற்றப்பத்திரிகை நகலை வழங்குவதற்காக 28 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். குற்றப்பத்திரிகை நகலை காகிதங்களில் வழங்க வேண்டும், பென்டிரைவ் மூலம் வேண்டாம் என குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு தெரிவித்தது. பி.என்.எஸ். சட்டப்பிரிவின்படி பென் டிரைவ் மூலம் குற்றப் பத்திரிகை நகலை வழங்க லாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு குற்றப்பத்திரிகை நகலை பெறாததால் எழும் பூர் நீதிமன்றம் வழக்கு விசா ரணையை நவம்பர் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு
சென்னை,அக்.28- தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் செவ்வாய்க்கிழமை (அக்.29) காலை வெளியிடப்படவுள்ளது. இதைத் தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பட்டியலில் ஏற்கெனவே உள்ள பதிவுகளில் நீக்கம், திருத்தம், இடமாற்றம் செய்தல், ஆதார் எண் இணைப்பு உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பங்கள் பெறப்படும். அதற்கான படிவங்கள் 6, 6 பி, 7, 8 ஆகியவற்றை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். நவம்பர் 28 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அலுவலக வேலை நாட்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர், வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகங்களில் விண்ணப்பங்களை அளிக்கலாம். https://voters.eci.gov.in என்ற இணையதளம், ‘VOTER HELPLINE’ என்ற கைபேசி செயலி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் டிசம்பர் 24 ஆம் தேதிக்குள் பரிசீலிக்கப்பட்டு, 2025 ஜனவரி 6 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் அக்டோபர் 24 அன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி இந்த பணிகள் தொடங்குகிறது.
வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்கள் தேதி மாற்றம்
தமிழக அரசால், 09.11.2024 அன்று பணிநாளாக அறிவிக்கப் பட்டதைத் தொடர்ந்து, இந்தியத் தேர்தல் ஆணையம், சிறப்பு முகாம் தேதிகளை 09.11.2024 (சனிக்கிழமை) மற்றும் 10.11.2024 (ஞாயிற்றுக்கிழமை)–க்கு பதிலாக, 16.11.2024 (சனிக்கிழமை) மற்றும் 17.11.2024 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளாக மாற்றியமைத்து அறி வித்துள்ளது என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அக்டோபர் 28 அன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.