states

img

தீக்கதிர் விரைவு செய்திகள்

குஜராத் மாநிலம் கேடா மாவட்டத்தில் கடந்த  ஆண்டு அக்டோபர் மாதம் 5 இஸ்லாமி யர்கள், பொதுவெளியில் கம்பத்தில் கட்டி வைக்கப்  பட்டு குஜராத் காவல்துறையினரால் கொடூரமாக தாக்கப்பட்டனர். இந்த வழக்கில், குற்றம் சாட்டப் பட்ட நான்கு காவலர்களும் 14 நாட்கள் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்றும், ரூ.2000 அபராதம் செலுத்த வேண்டும் என்றும் குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் ஸ்பா மையங்கள் மற்றும் மசாஜ்  பார்லர்களில் விபச்சாரம் செய்தது தொடர்பாக 40 பேர் கைது செய்யப்பட்டு, விபச்சாரத்தில் ஈடு படுத்தப்பட 30 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் ஆப்பில் அறிமுகமான பிராட்காஸ்டிங் சேனல் வசதி, பேஸ்புக் மற்றும் மெசஞ்சரிலும் அமலாகும் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

திறன் மேம்பாட்டு திட்ட ஊழல் வழக்கில் சிறை யில் அடைக்கப்பட்டுள்ள ஆந்திர மாநில முன்  னாள் முதல்வரும், தெலுங்குதேச தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவலை நவம்பர் 1 வரை நீட்டித்து விஜயவாடாவில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆணுக்கான உலகின் முதல் கருத்தடை ஊசிக்கான 7 வருட ஆய்வு வெற்றிகரமாக  நிறைவடைந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்துள்ளது.  கருத்தடை  ஊசியின் ஒட்டுமொத்த செயல்திறன் 97.3% என வும், கர்ப்பத்தடையின் அடிப்படையில் செயல்  திறன் 99.02% எனவும் வெற்றி உறுதி செய்யப்பட்ட நிலையில், விரைவில் இந்த கருத்தடை ஊசிகள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தில்லி  கலால் கொள்கை ஊழல் தொடர்பாக தில்லி முன்னாள் துணை முதல்வரும், ஆம்  ஆத்மி கட்சியின் முக்கிய தலைவருமான மணீஷ்  சிசோடியா சிபிஐயால் கடந்த பிப்ரவரி 26 அன்று  கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்  பட்டார். அவரது காவலை நவம்பர் 22 அன்று வரை நீட்டித்துள்ளது விசாரணை நீதிமன்றம்.

பின்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட பிரபல மொபைல் தயாரிப்பு நிறுவனமான நோக்கியா நிறுவனம் வருவாய் பற்றாக்குறை மற்றும் செலவுகளைக் குறைக்கும் நோக்கத்தில் உலகம் முழுவதும் ஊழியர்களின் எண்ணிக்கை யை 16% குறைப்பதாக அறிவித்துள்ளது. நோக்  கியா நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் கிட்டத்தட்ட  14 ஆயிரம் ஊழியர்கள் வேலை இழக்க நேரிடும் என தகவல் வெளியாகியுள்ளது. நோக்கியாவில் இந்தியா, அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் அதிக ளவில் பணியாற்றி வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தின் பரமத்தி அருகே உள்ள கட்பால் கிராமம் அருகே பயிற்சியின் போது விமானம் விபத் துக்குள்ளானதில், விமானத்தில் இருந்த 2 பேர்  படுகாயத்துடன் மருத்துவமனையில் அனும திக்கப்பட்டுள்ளனர்.