states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

அசாம் மாநிலம் நகான் பகுதியில் ஞாயிறன்று 4  ரிக்டர் அளவில் லேசான நில நடுக்கம் உணரப் பட்டது. பூமிக்கு அடியில்  10 கி.மீட்டர் ஆழத்தில் மையமாக கொண்டு இந்த நில அதிர்வு ஏற் பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. இந்த நில நடுக்கத்தால் சேதம் எது வும் ஏற்பட்டதாக எந்த தக வலும் இல்லை.

இந்தியாவின் மிக நீண்ட  விரைவுச் சாலையான தில்லி-மும்பை விரை வுச் சாலை ரூ.12,150 கோடிக்கும் அதிகமான செலவில் அமைக்கப் பட்டுள்ளது. இந்த வழித் தடத்தை பிரதமர் மோடி தவ்சாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திறந்து வைத்தார். மேலும் ராஜஸ்தானில் ரூ.18,100 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டங் களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு உதவும் விதமாக திரிணா முல் காங்கிரஸ் செயல் படுவதாக திரிபுரா மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் அஜோய் குமார் தெரிவித்துள்ளார். அவர் பளால் காங்கிரஸ்-இடது சாரி கூட்டணிக்கு எந்த  ஒரு இடையூறும் அளிக்க முடியாது எனவும் தெரி வித்தார்.

தீக்கதிர் விரைவு செய்திகள்

பட்டாசு கடையில் தீ விபத்து: குழந்தை உள்பட 2 பேர் பலி 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புத்து கோவிலில் அம்பலூர் சாலையில் உள்ள  தனியார் பட்டாசு கடையில் ஞாயிறன்று மதியம் திடீரென தீ பிடித்து, கடையில் இருந்த பட்டாசு களில் பரவியது. இதனால் பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில், அருகே இருந்த பட்டாசு குடோ னிற்கும் தீ பரவியது. இதனால், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள் உட்பட குழந்தைகள் உள்ளே சிக்கிக் கொண்டனர். இந்த தீ விபத்தில் குழந்தை உள்பட 2 பேர் பலியானதாக கூறப்படுகிறது.

மதுபான முறைகேடு: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. மகன் கைது 

ஆந்திர மாநில ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மகுண்டா சீனிவாசலு ரெட்டி யின் மகன் ராகவ் (30). இவர் ஆந்திராவில் பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவர் தில்லி மதுபான முறைகேடு வழக்கில் ரூ.180 கோடி ஆதாயம் அடைந்த தாக மத்திய அமலாக்க பிரிவு இயக்குநரகத்திற்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் அமலாக்க பிரிவு அதிகாரிகள் ராகவ் நிறுவனங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் ஆம் ஆத்மி  தகவல் தொடர்பு பொறுப்பாளர் விஜய் நாயருடன் நெருங்கிய தொடர்பு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.  இதையடுத்து அமலாக்க பிரிவு துறை அதிகாரிகள் ராகவை கைது செய்து தில்லி யில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சிறப்பு நீதிபதி நரேஷ் குமார், லகா ராகவை 10 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். 

13 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் 

மகாராஷ்டிரா, ஆந்திரா, அசாம், பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு புதிய  ஆளுநர்களை நியமித்து குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார்.  இதன்படி, மணிப்பூர் ஆளுநராக இருந்த இல.கணேசன் நாகாலாந்து மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக தமிழக பாஜக மூத்த நிர்வாகி சி.பி.ராதாகிருஷ்ணன், அருணாச்சலப் பிரதேசம் மாநில ஆளுநராக திரிவிக்ராம் பர்னாயக், சிக்கிம் ஆளுநராக லட்சுமணன் பிரசாத் ஆச்சார்யா, இமாச்சலப்பிரதேச ஆளுநராக பிரதாப் சுக்லா, அசாம் மாநில ஆளுநராக குலாப் சந்த் கட்டாரியா, ஆந்திர மாநில ஆளுநராக அப்துல் நசீர், சத்தீஸ்கர் மாநில ஆளுநராக பிஸ்வா பூஷன் ஹரிச்சந்திரன், மணிப்பூர் மாநில ஆளுநராக அனுசுயா, மேகாலயா மாநில ஆளுநராக பகு சவுகான், பீகார் மாநில ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத், மகாராஷ்டிரா மாநில ஆளுநராக ரமேஷ் பைஸ், லடாக் மாநில ஆளுநராக மிஸ்ரா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச விமான கண்காட்சி: பிரதமர் தொடங்கி வைக்கிறார் 

மத்திய பாதுகாப்புத்துறை சார்பில் ‘ஏரோ இந்தியா’ என்ற பெயரில் இந்த விமான கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் பிப்ரவரி 13-17 ஆகிய 5 நாட்கள் சர்வதேச விமான கண்காட்சி நடைபெறும் என மத்திய  பாதுகாப்புத்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில், எலகங்கா விமானப்படை தளத்தில் திங்க ளன்று சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

4 மாநில உயர்நீதிமன்றங்களுக்கு  தலைமை நீதிபதிகள் நியமனம்

புதுதில்லி, பிப்.12-  குஜராத், கவுகாத்தி, திரிபுரா, ஜம்மு  காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய 4 உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  இதன்படி குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சோனியா கிரிதர் கோகனி, அசாம் மாநிலம் கவுகாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சந்தீப் நேதா, திரிபுரா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஜஸ்வந்த் சிங், ஜம்மு- காஷ்மீர் & லடாக் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கோட்டீஸ்வர் சிங் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.