சென்னை,ஜன.14- தமிழர் திருநாளாம் பொங்கலை யொட்டிசொந்த ஊர்களுக்கு மக்கள் செல்ல வசதியாக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப் பட்டன. ஆன்லைனில் முன்பதிவு செய்து பயணிக்கின்ற வசதி செய்து கொடுத்தது. இந்த ஆண்டு 2 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளது குறிப் பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னை யிலிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு பொங்கல் சிறப்பு பேருந்துகள் ஜனவரி 12 முதல் இயக் கப்பட்டன. 12 மற்றும் 13 ஆகிய நாட்க ளிலும் மொத்தம் 6,796 பேருந்து கள் இயக்கப்பட்டன. இதில், அரசு பேருந்துகளில் மட்டும் 4 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்கு வரத்து கழகம் தெரிவித்துள்ளது. கோயம்பேடு, கே.கே.நகர், தாம்பரம், மாதவரம், பூந்தமல்லி, உள்ளிட்ட 6 பேருந்து நிலை யங்களிலும் நள்ளிரவு வரை கூட்டம் அலைமோதியது. குறிப்பாக கோயம்பேடு பேருந்து நிலையம் மாலை 4 மணியிலிருந்து பயணிகள் கூட்டத்தால் திணறியது. இரவு நேரத்தில் பிளாட்பாரத்தில் நடக்க முடியாத அளவிற்கு கூட்டம் நிரம்பி வழிந்தது. குடும்பம் குடும்பமாக மக்கள் சொந்த ஊர்களுக்கு படை யெடுத்து சென்றனர். பள்ளி, கல்லூரிகள், அரசு அலு வலகங்கள், நிறுவனங்களுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டதால் மக்கள் சாரை சாரை யாக வந்து கொண்டே இருந்தனர். முன்பதிவு செய்த பயணிகள் மட்டு மின்றி முன்பதிவு செய்யாமல் கடைசி நேரத்தில் பயணம் செய்ய வரு பவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.