சென்னை, ஏப்.19- கோயில்களில் நடைபெறும் திருமணங்களில் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தால் புத்தாடைகளுடன் கட்ட ணமில்லா திருமணம் அறிவிக் கப்பட்டு நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது. இவ்வாண்டு முதல் அத்திருமணங் களுக்கு 4 கிராம் தங்கத்தாலி கோயில் சார்பில் வழங்கப்படும் என்று சட்டப்பேரவை யில் அமைச்சர் பி.கே. சேகர்பாபு அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதன்கிழமை (ஏப்.19) இந்து சமய அறநிலையத்துறையின் மானி யக்கோரிக்கை மீது விவாதம் நடை பெற்றது. பிறகு, பதில் அளித்து பேசிய அமைச்சர் பி.கே.சேகர் பாபு, “இந்த அரசு பொறுப்பேற்ற திலிருந்து இதுவரைக்கும் 632 கோயில்களுக்கு ரூ.128 கோடி செலவில் குடமுழுக்கு நடத்தப் பட்டுள்ளது. இதில், 100 ஆண்டு களைக் கடந்த 8 கோவில்களும் 400 ஆண்டுகளைக் கடந்த ஒரு கோயி லும் அடங்கும்”என்றார். ஒரு கால பூசைத் திட்டத்தின் கீழ் கூடுதலாக 2 ஆயிரம் கோயில்க ளுக்கு ரூ.40கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. 15,000 அர்ச்ச கர்கள் நலன் காக்க மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப் படுகிறது. மேலும், 1000 ஆண்டு களுக்கு மேல் பழமையான கோயில் களை புனரமைக்க ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கோயில் களில் நடைபெறும் கட்டணமில்லாத திருமணங்கள் செய்து கொள்ளும் இணைக்கு தற்போது ரூ.50,000 உயர்த்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்த அரசு பொறுப்பேற்றதி லிருந்து இதுவரை ரூ.4,262 கோடி மதிப்புள்ள 4,478 ஏக்கர் பரப்புள்ள நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட் கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். பிறகு ராமேசுவரம் கோயிலுக்கு, அக்னி தீர்த்த படித்துறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.50 கோடி அரசு மானியம் வழங் கப்படும். தமிழர்கள் தொன்று தொட்டு வழிபடும் கிராம தெய்வங்க ளின் சுடுமண் சிற்பங்களைப் பாது காத்துச் சீரமைக்கும் பணி 6 திருக் கோயில்களில் ரூ.3 கோடியில் மேற் கொள்ளப்படும். 19 கோயில்களில் புதிய திருத் தேர்கள் ரூ.11.83 கோடியில் உரு வாக்கப்படும். 53 திருக்கோயில் களிலுள்ள தேர்களுக்கு ரூ. 10.25 கோடியில் பாதுகாப்பு கொட்டகை கள் அமைக்கப்படும். 46 கோயில் களின் குளங்கள் ரூ.25.94 கோடி யில் சீரமைக்கப்படும். வடலூர் வள்ளலார் நிலையத்தில் 3 நாள் தைப்பூச விழாவிற்கு வருகை தரும் 10,000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். அர்ச்சகர்களுக்கு 6 மாத கால பயிற்சி கோயில்கள் சார்பில் நடத்தப் படும் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி களில் பயிற்சி முடித்தவர்கள், பணி அனுபவம் பெற ஏதுவாக திருக் கோயில்களில் மூத்த அர்ச்ச கர்களின் கீழ் பணி அனுபவம் பெற வாய்ப்பளித்து ரூ.6,000 மாத ஊக்கத் தொகை வழங்கப்படும். அர்ச்சகர் குடும்ப ஓய்வூதியம் ரூ.1,500 லிருந்து ரூ.2,000/- ஆக உயர்த்தி வழங்கப்படும். ஓய்வுபெற்ற கோயில் பணியாளர்களுக்கு பொங்கல் கொடையாக ரூ.1,000 வழங்கப்படும் என்றும் பல்வேறு புதிய அறிவிப்புகளையும் அமைச் சர் வெளியிட்டார்.