சென்னை, நவ.27- சென்னை மண்ட லத்திற்கு உட்பட்ட 4 கோவில் களில் ரூ. 1,48 கோடி மதிப் பீட்டில் மேற்கொள்ளப்பட வுள்ள திருப்பணிகளை அற நிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: பெரியபாளையத்தம் மன் கோவிலின் நகைகள் சுத்த தங்கமாக மாற்றி 98 கிலோ தங்கநிதி வைப்பு நிதி பத்திரத்தில் வைக்கப்பட்டு ஆண்டொன்றுக்கு ஒரு கோடியே 5 லட்சம் ரூபாய் வட்டி தொகையாகவும், இருக்கன்குடி மாரியம்மன் கோயில் 28 கிலோ தங்க நகைகள் முதலீடு செய்யப் பட்டு ஆண்டொன்றுக்கு 38 லட்சம் வட்டித் தொகையாக வும் வருகின்றன. அந்தத் தொகை அந்தந்த கோவி லின் மேம்பாட்டிற்கு செல விடப்படும். இதேபோல திரு வேற்காடு, மாங்காடு அம் மன் கோவில்களிலும் பயன் படுத்த இயலாத தங்க நகை கள் நீதிபதி முன்னிலையில் முழுமையாக அளவிடப் பட்டு, சுத்தத் தங்கமாக மாற் றிட தற்போது மும்பைக்கு எடுத்துச் செல்லப்படு கின்றன. இந்த பணிகள் தொடர்ச்சி யாக நடைபெறும் நிலை யில் குறைந்தபட்சம் 4 ஆயி ரம் கிலோ தங்கமாவது கோவில் பெயரிலே வைப்பு நிதியாக வைக்கப்படும் சூழல் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.