சென்னை, செப். 14- தமிழ்நாட்டின் பல இடங்களில் மழை பெய்ததால் டெங்கு காய்ச் சல் பரவ தொடங்கி உள்ளது. கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சல் உயிரிழப்பையும் ஏற்படுத்தும் என்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சமீபத்தில் சென்னை மதுர வாயலை சேர்ந்த 4 வயது சிறு வன் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை களை தமிழ்நாடு அரசு முடுக்கி விட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடலூர் மஞ்சக்குப்பம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 4 பெண்கள் உள்பட 6 பேருக்கு டெங்கு காய்ச் சல் இருப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கு அரசு மருத்துவ மனையில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களை 24 மணி நேரமும் மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இந்திரா நகர் பகுதியில் 2 சிறுமிகளுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள் வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதனால் அந்த பகுதி யில் ஒட்டுமொத்த துப்புரவு பணி நடைபெற்றது. மேலும் காய்ச்சல் முகாம்களும் நடத்தப்பட்டன. திருவண்ணாமலையில் 5 பேர் டெங்கு அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்க ளுக்கு இன்னும் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட வில்லை. பாதிக்கப்பட்டவர்கள் உள்ள குடியிருப்பு பகுதிகளில் துப்புரவு பணி மற்றும் மருத்துவ முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் சற்று அதி கரித்து வருகிறது. புதுக்கோட்டை வடக்கு 3-ம் வீதியில் ஒருவருக் கும், அறந்தாங்கி பகுதி மேற்பனைக்காடு குளமங்கலம் வடக்கு தெரு, எழில் நகர், பூவை ஆகிய பகுதிகளில் 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கோவையில் கடந்த 11 நாட் களில் 13 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர். இவர்களில் 10 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டனர். 3 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படு கிறது. இது தவிர தனியார் மருத்துவ மனைகளில் சிலர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெறுவதாக தெரி கிறது. அவர்கள் பற்றி கணக் கெடுக்கும் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டு உள்ளனர். மதுரையில் ஏராளமானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவது அதிகரித்துள்ளது. அவர்களின் ரத்த மாதிரிகளை சோதனை செய்ததில் தெப்பக் குளம், சக்கிமங்கலம் பகுதியை சேர்ந்த தலா ஒருவருக்கும், நேற்று 3 பேருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது.