states

3 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தா?

சென்னை, மே 27- தமிழகத்தில் 3 மருத்துவக் கல்லூரி களின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட தாக வெளியான தகவல் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகை யில்,அரசியல் ஆதாயத்துக்காக தமிழ கத்தில் உள்ள மருத்துவக் கட்டமைப் புகளை குறை சொல்வது போன்ற செயல்களை தேசிய மருத்துவ ஆணை யம் தவிர்த்துக் கொள்வது நல்லது என்று ஆவேசமாக தெரிவித்தார். சென்னை டுமீங்குப்பத்தில் முதல மைச்சரின் விரிவான மருத்துவ காப் பீட்டுத் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ  முகாம் மற்றும் காப்பீட்டுத் திட்ட பயனா ளிகள் பதிவு செய்யும் முகாமை மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் செய்தி யாளர்களிடம் கூறுகையில், சென்னை  ஸ்டான்லி, திருச்சி மற்றும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மிகப் பழமை வாய்ந்த மருத்துவமனைகளாகும். திருச்சி மற்றும் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் பயிலும்  மாணவர்கள் மிகச் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

தேசிய மருத்துவ ஆணையம் சிறிய குறைகளான சிசிடிவி கேமராக்கள் ்இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இல்லை என்ற குறைகள் சொல்லி யிருக்கிறார்கள். இந்தக் குறைகளையும், பழுதடைந்துள்ள சிசிடிவி கேமராக்களை யும் விரைவில் சரி செய்து விடுவோம் என்றார். ஆனால், இதற்கு மருத்துவ மனையின் அங்கீகாரம் ரத்து, மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து போன்ற செய்திகளை பெரிதாக வெளியிடு வது என்பது வருத்தத்துக்குரியது. இந்த சிறிய குறைகளுக்காக அங்கீகாரம் ரத்து போன்ற பெரிய வார்த்தைகளை சொல்வது என்பது இந்த மாநிலத்தின் மீது அவர்கள் காட்டுகின்ற பாகுபாட்டை வெட்ட வெளிச்சமாக காட்டுகிறது என்றும் அவர் கூறினார். நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு வருவதாலும், அரசியல் ஆதாயத்துக்காக தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கட்டமைப்பு களை குறை சொல்வது போன்ற செயல்களை தவிர்த்துக்கொள்வது நல்லது என்றார். ஒன்றிய மாநில அரசின் உறவுகளுக்கு எதிராகவும், மாநில அரசின் உரிமை களுக்கு எதிராகவும் பேசுவது அவர்களுக்கே  பாதிப்பை ஏற்படுத்தும் என்பது கடந்த காலங்களில் நடந்த நிகழ்வுகள் உறுதிப் படுத்தியுள்ளன. எனவே சற்று பொறுமை யாக இருப்பது நல்லது என்று அமைச்சர் கூறினார்.