states

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சாலை விபத்தில் பலி

சேலம், ஜூன் 6- உத்தம சோழபுரம் பகுதியில் இரண்டு சக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர்  உயிரிழந்தனர். சேலம் மாவட்டம், கல்பாரப்பட்டி பகுதி யைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். தறித் தொழில் செய்து வரும் இவருக்கு, மாரி யம்மாள் என்ற மனைவியும், பூங்கொடி என்ற  மகளும் உள்ளனர். இந்நிலையில், உத்தம சோழபுரம் அருகே புத்தூர் பகுதியில் உள்ள  மாரியம்மாளின் தாயார் வீட்டிற்கு, மூவரும்  குடும்பத்துடன் இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த னர். உத்தமசோழபுரம் தேசிய நெடுஞ் சாலை பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது, அதிவேகமாக வந்த கார் ஒன்று, இவர்கள் சென்ற வாகனத்தின் மீது மோதி யது. இவ்விபத்தில் இருசக்கர வாகனத்தில்  வந்த வெங்கடாஜலம், அவரது மனைவி மாரி யம்மாள், மகள் பூங்கொடி ஆகிய மூவரும் தூக்கி வீசப்பட்டனர். மாரியம்மாள் மற்றும் பூங்கொடி ஆகிய இருவரும் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான  நிலையில் வெங்கடாசலம் மீட்கப்பட்டு, தனி யார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவரும் உயி ரிழந்தார். இவ்விபத்து குறித்து கொண்டலாம்பட்டி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், உயிரிழந்த மூவரின் உடல் களும் உடற்கூராய்வுக்காக சேலம் அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட் டது. விபத்தை ஏற்படுத்திய காருடன் ஓட்டு நரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று காவல் துறையினர் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

;